ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

அதிகம் வசூலித்த பயோபிக் திரைப்படமான மைக்கேல்! தலை சுற்ற வைக்கும் வசூல்!

மைக்கேல் ஜாக்சனின் பயோபிக் மிகப்பெரிய வசூலைச் செய்திருக்கிறது...

Published On :14 ஜூலை 2026, 1:13 pm IST

உலகளிலேயே அதிகம் வசூலித்த பயோபிக் திரைப்படம் என்கிற சாதனையைச் செய்தது மைக்கேல்.

அன்டொய்ன் ஃபகா இயக்கத்தில் உருவான மைக்கேல் ஜாக்சனின் பயோபிக் திரைப்படமான மைக்கேல் பெரிய எதிர்பார்ப்புடன் கடந்த ஏப். 22 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. மைக்கேல் ஜாக்சன் கதாபாத்திரத்தில் ஜாபர் ஜாக்சன் (மைக்கேல் ஜாக்சனின் உறவினர்) நடித்திருந்தார்.

ஆனால், இப்படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றும் மிகப்பெரிய பயோபிக் படங்களில் இதுவே சுமாரானது என்றும் விமர்சனங்கள் வந்தன. இந்தக் கலவையான விமர்சனங்களால் படம் வணிக அளவில் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

Story image

ஆனால், அதிரடியாக வசூலைக் குவிக்க ஆரம்பித்த இப்படம் வெளியான சில நாள்களிலேயே ரூ. 3000 கோடி வசூலைக் கடந்தது.

இந்த நிலையில், இப்படம் உலகளவில் 1 பில்லியன் டாலர் (ரூ. 9,600 கோடிக்கும் மேல்) வசூலித்து ஹாலிவுட்டில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. முதன்முறையாக ஒரு பயோபிக் திரைப்படம் அபாரமான வசூலைச் செய்திருப்பது இதுவே முதல்முறை. இந்தியாவில் மட்டும் இப்படம் ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

'Michael' set the record for the highest-grossing biopic worldwide.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.