ஜப்பானில் வெளியாகும் புஷ்பா -2! டோக்கியோ சென்றார் அல்லு அர்ஜுன்!
புஷ்பா - 2 திரைப்படம் ஜப்பானில் வெளியாவது குறித்து...


ஜப்பான் நாட்டில், “புஷ்பா - 2” திரைப்படம் வெளியாவதை முன்னிட்டு நடிகர் அல்லு அர்ஜுன் அந்நாட்டின் தலைநகர் டோக்கியோவுக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் அல்லு அர்ஜுன் - இயக்குநர் சுகுமார் ஆகியோரது கூட்டணியில் உருவாகி, கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “புஷ்பா -2”.
இந்தியத் திரையுலகின் வெற்றி பெற்ற படங்களில் ஒன்றான “புஷ்பா -2” திரைப்படம் ரூ.1,500 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனைப் படைத்தது.
நடிகர்கள் ஃபகத் ஃபாசில், ரஷ்மிகா மந்தனா, சுனில், ஜகபதி பாபு ஆகியோரது நடிப்பில் வெளியான இப்படம் வரும் ஜன.16 ஆம் தேதி ஜப்பான் நாட்டின் திரையரங்குகளில் வெளியாகின்றது.
இந்த நிலையில், ஜப்பானில் வெளியாகும் “புஷ்பா - 2” படத்தின் புரமோஷன் பணிகளுக்காக இன்று (ஜன. 13) அந்தப் படத்தின் நாயகன் அல்லு அர்ஜுன் டோக்கியோ நகரத்துக்குச் சென்றுள்ளார்.
இதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...