டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ஜப்பானில் வெளியாகும் புஷ்பா -2! டோக்கியோ சென்றார் அல்லு அர்ஜுன்!

புஷ்பா - 2 திரைப்படம் ஜப்பானில் வெளியாவது குறித்து...

News image
புஷ்பா 2 படத்தில் அல்லு அர்ஜுன்...- (கோப்புப் படம்)
Updated On :13 ஜனவரி 2026, 1:03 pm

இணையதளச் செய்திப் பிரிவு

ஜப்பான் நாட்டில், “புஷ்பா - 2” திரைப்படம் வெளியாவதை முன்னிட்டு நடிகர் அல்லு அர்ஜுன் அந்நாட்டின் தலைநகர் டோக்கியோவுக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் அல்லு அர்ஜுன் - இயக்குநர் சுகுமார் ஆகியோரது கூட்டணியில் உருவாகி, கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “புஷ்பா -2”.

இந்தியத் திரையுலகின் வெற்றி பெற்ற படங்களில் ஒன்றான “புஷ்பா -2” திரைப்படம் ரூ.1,500 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனைப் படைத்தது.

நடிகர்கள் ஃபகத் ஃபாசில், ரஷ்மிகா மந்தனா, சுனில், ஜகபதி பாபு ஆகியோரது நடிப்பில் வெளியான இப்படம் வரும் ஜன.16 ஆம் தேதி ஜப்பான் நாட்டின் திரையரங்குகளில் வெளியாகின்றது.

இந்த நிலையில், ஜப்பானில் வெளியாகும் “புஷ்பா - 2” படத்தின் புரமோஷன் பணிகளுக்காக இன்று (ஜன. 13) அந்தப் படத்தின் நாயகன் அல்லு அர்ஜுன் டோக்கியோ நகரத்துக்குச் சென்றுள்ளார்.

இதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளன.

summary

Allu Arjun has traveled to Tokyo, the capital of Japan,for the release of the film "Pushpa - 2" in that country.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.