டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

சேலத்தில் பிப். 13-ல் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டம்: தவெகவினர் மீண்டும் மனு!

சேலத்தில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி கோரியிருப்பது பற்றி...

News image
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்.
Updated On :8 பிப்ரவரி 2026, 9:33 am

இணையதளச் செய்திப் பிரிவு

சேலத்தில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தவெகவினர் மீண்டும் அனுமதி கோரியுள்ளனர்.

கரூரில் நடந்த பிரசாரத்தின்போது பெண்கள், குழந்தைகள் என 41போ் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இதையடுத்து, பிரசார பயணத்தை நடிகர் விஜய் ரத்து செய்தார்.

இதனிடையே, கடந்த நவம்பா் மாதம் சேலத்தில் இருந்து பிரசாரத்தை மீண்டும் தொடங்க திட்டமிட்டிருந்தார். ஆனால், கூட்டத்துக்கு எவ்வளவு பேர் வருவார்கள் என்ற தகவலை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்பதுடன், கூட்டம் நடத்துவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பே அனுமதி பெற வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே, சீலநாயக்கன்பட்டி நெடுஞ்சாலை அருகே உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் கூட்டம் நடத்த அனுமதி கோரி, தவெக மத்திய மாவட்டச் செயலாளர் தமிழன் ஆ.பாா்த்திபன் தலைமையில் தவெக நிர்வாகிகள், காவல் ஆணையர் அனில்குமார் கிரியிடம் கடந்த புதன்கிழமை மனு அளித்தனர்.

ஆனால், அரசு வழிகாட்டுதல்படி வழிமுறைகள் குறிப்பிடப்படவில்லை என்று தெரித்து அந்த மனு காவல் துறை சார்பில் நிராகரிக்கப்பட்டது.

முன்னதாக, சேலம் மகுடஞ்சாவடி பகுதியில் உள்ள காளிகவுண்டம்பாளையம் பகுதி திடலில் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டத்துக்கு அனுமதி கோரி, மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் ஒன்றியச் செயலாளர் கார்த்தி கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மனு அளித்திருந்தார். இந்த மனு காவல் துறை பரிசீலனையில் உள்ளது.

இந்த நிலையில், சீலநாயக்கன்பட்டி நெடுஞ்சாலை அருகே உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்த, மீண்டும் அனுமதி கேட்டு சேலம் மாநகர காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவில், விஜய் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் 5 ஆயிரம் மட்டுமே கலந்துகொள்வார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி திடல் 25 ஏக்கர் பரப்பளவு கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

summary

After permission was denied for TVK leader Vijay's campaign in Salem, TVK members have requested permission again.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.