/

த்ரிஷ்யம் - 4 வருமா? ஜித்து ஜோசஃப் பதில்!

த்ரிஷ்யம் தொடர்ச்சி குறித்து ஜித்து ஜோசஃப் பேச்சு...

News image
ஜித்து ஜோசஃப், மோகன்லால்
Updated On :7 பிப்ரவரி 2026, 2:05 pm

இணையதளச் செய்திப் பிரிவு

இயக்குநர் ஜித்து ஜோசஃப் த்ரிஷ்யம் நான்காம் பாகம் குறித்து பேசியுள்ளார்.

இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் கிரைம் திரில்லர் வகையில் உருவான ‘த்ரிஷ்யம்’, ‘த்ரிஷ்யம் 2’ ஆகிய திரைப்படங்கள் மாபெரும் வெற்றியடைந்தன.

தற்போது, இதன் மூன்றாம் உருவாகியுள்ளது. இப்படம் ஏப்ரல் 2 ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில், பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட ஜித்து ஜோசப்பிடம், 'த்ரிஷ்யம் நான்காம் பாகம் வருமா?’ எனக் கேட்கப்பட்டது.

அதற்கு, ஜித்து ஜோசஃப், “த்ரிஷ்யம் கதையை இதற்கு மேல் கொண்டு சென்றால் சுவாரஸ்யம் இருக்காது. அதனால், மூன்றாம் பாகத்துடன் இது நிறைவடைகிறது. கதையை நீட்டிக்கும் விருப்பமும் இல்லை.” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.