ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சூர்யா - 47 திரைப்படத்தின் போஸ்டர் அப்டேட்!

சூர்யா - 47 திரைப்படம் குறித்து...

சூர்யா - 47 பூஜையில்...

Published On :20 ஆகஸ்ட் 2026, 4:07 pm IST

நடிகர் சூர்யா நடிப்பில் உருவான அவரது 47-வது திரைப்படத்தின் முதல் போஸ்டர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

சூர்யா தன் 47-வது படமாக இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், அண்மையில் முழுமையாக நிறைவடைந்ததாக விடியோ வெளியிட்டு அறிவிக்கப்பட்டது.

நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு சூர்யா - 47 திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டனர். மேலும், இப்படத்திற்கு ‘சீனு’ எனப் பெயரிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை இந்தாண்டு இறுதியில் திரைக்குக் கொண்டு வர முடிவு செய்துள்ளதாக நடிகர் சூர்யா தெரிவித்திருந்தார். அதனால், தீபாவளி வெளியீடாக வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இப்படத்தின் முதல் பெயர் போஸ்டர் இம்மாத இறுதிக்குள் வெளியாகலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் என அடுத்தடுத்த வெற்றிகளைச் சூர்யா கொடுத்திருப்பதால் ஹாட்ரிக் வெற்றிக்காக அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Information has been released regarding the first look poster of actor Suriya's 47th film.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.