ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஓடிடியில் வெளியாகும் திருப்பங்கள் நிறைந்த காதல் திரைப்படம்!

ஸ்ரீனிவாச மங்காபுரம் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து...

Srinivasa Mangapuram

ஸ்ரீனிவாச மங்காபுரம் போஸ்டர். - படம்: எக்ஸ்

Published On :19 ஆகஸ்ட் 2026, 6:13 pm IST

நடிகர் மகேஷ் பாபு உறவினர் ஜெய கிருஷ்ணா கட்டமனேனி நடிப்பில் உருவான ஸ்ரீனிவாச மங்காபுரம் திரைப்படம் நாளை(ஆக. 20) ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

அஜய் பூபதி இயக்கத்தில் ஜெய கிருஷ்ணா கட்டமனேனி மற்றும் ராஷா ததானி ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்து வெளியான திரைப்படம் ஸ்ரீனிவாச மங்காபுரம்.

மேலும் இந்தப் படத்தில் மோகன் பாபு, வி.கே. நரேஷ் மற்றும் பிரம்மாஜி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

அஞ்சனா புரோடக்‌ஷன்ஸ் பேனரில் நாகேந்திர பாபு படத்தை தயாரித்துள்ளார். சமீர் ரெட்டி ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார்.

படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாகவும், இடைவேளை காட்சி திருப்புமுனையாகவும் அமைந்திருந்ததாக ரசிகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், ரூ. 25 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த, ஸ்ரீனிவாச மங்காபுரம் திரைப்படம் நாளை(ஆக. 20) அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகிறது.

Summary

The film Srinivasa Mangapuram, starring actor Mahesh Babu's relative Jaya Krishna Ghattamaneni, is set to release on an OTT platform tomorrow (August 20).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.