ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வெற்றி பெற மொட்டையடித்த இயக்குநர் வெங்கி அட்லுரி!

சூர்யா திரைப்படத்திற்காக மொட்டையடித்த இயக்குநர் வெங்கி அட்லுரி...

நடிகர் சூர்யா, இயக்குநர் வெங்கி அட்லுரி

Published On :13 ஆகஸ்ட் 2026, 4:38 pm IST

இயக்குநர் வெங்கி அட்லுரி விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்திற்காக மொட்டையடித்துள்ளார்.

இயக்குநர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் நாளை (ஆக. 14) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் டீசர், டிரைலர் ஆகியவை எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதால் முதல் நாளுக்கான டிக்கெட் முன்பதிவுகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

நீண்ட காலம் கழித்து சூர்யா நடிப்பில் வெளியாகும் முழுநீளக் காதல், குடும்பத் திரைப்படம் என்பதால் அவரின் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இப்படம் வெளியாவதாலும் வெற்றி பெற வேண்டும் என்றும் இயக்குநர் வெங்கி அட்லுரி திருப்பதியில் மொட்டையடித்து சாமி தரிசனம் செய்துள்ளார்.

இப்படத்தின் விநியோகிஸ்தர்களுக்கான சிறப்புக் காட்சியைக் கண்டவர்கள், கண்டிப்பாக விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஆகும் எனப் பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Director Venky Atluri has shaved his head for the film Viswanath and Sons.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.