
இப்படியொரு கிளைமேக்ஸை பார்த்திருக்க மாட்டீர்கள்: வெங்கட் அட்லுரி
இயக்குநர் வெங்கட் அட்லுரி விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.

வெங்கட் அட்லுரி
இயக்குநர் வெங்கட் அட்லுரி விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தின் கதை குறித்து பேசியுள்ளார்.
இயக்குநர் வெங்கட் அட்லுரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் வருகிற ஆக. 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. கருப்பு திரைப்படத்தைத் தொடர்ந்து வெளியாகும் படமென்பதால் சூர்யா ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஆக. 2) கோவையில் நடைபெற்றது. இதில் நடிகர் சூர்யா உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் பேசிய இயக்குநர் வெங்கட் அட்லுரி, “2.30 மணி நேரம் கொண்ட விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தில் குறைந்தது 1.45 மணி நேரம் உங்களுக்கு நல்ல பொழுதுபோக்காக இருக்கும். என்னை நம்புங்கள், இது என் வாக்கு. ஜென்ஸி தலைமுறையினர் இப்படத்தை மிகவும் விரும்புவார்கள். நடிகர்கள் சூர்யா மற்றும் ராதிகாவுக்கு இடையேயான 10 நிமிட நகைச்சுவைக் காட்சி விரும்பப்படும். நீங்கள் இப்படியொரு கிளைமேக்ஸை பார்த்திருக்க மாட்டீர்கள். இது, நவீன கால திரைப்படமாக உருவாகியிருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
Director Venky Atluri has spoken about the story of the film Viswanath & Sons.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







