ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

5.2 கோடி பார்வைகளைக் கடந்த சூர்யாவின் பட்டாம்பூச்சி பாடல்!

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் பட்டாம்பூச்சி பாடல் இணையத்தில் வைரல்.

Vishwanath and Sons

பட்டாம்பூச்சி பாடல் - படம்: எக்ஸ்

Published On :10 ஆகஸ்ட் 2026, 4:31 pm IST

நடிகர் சூர்யா நடித்துள்ள விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் பட்டாம்பூச்சி பாடல் இணையத்தில் 5.2 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.

இயக்குநர் வெங்கட் அட்லுரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் வருகிற ஆக. 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

கருப்பு திரைப்படத்தைத் தொடர்ந்து வெளியாகும் படமென்பதால் சூர்யா ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

நாயகியாக மமிதா பைஜூவும் முக்கிய பாத்திரங்களில் நடிகை ராதிகா, ரவீனா தண்டன் ஆகியோர் நடித்துள்ளனர். உறவுகளின் மேன்மையைப் பேசும் கதையாக எடுக்கப்பட்ட இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியானது.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா கோவையில் பெரியளவில் நடைபெற்றது. இதில் நடிகர் சூர்யா உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

இதனிடைய, ஜி.வி. பிரகாஷ் இசையமைத்த “விஸ்வநாத் அண்ட் சன்ஸ்” படத்தின் “பட்டாம்பூச்சி” எனும் பாடல் கடந்த ஜூன் 19 ஆம் தேதி வெளியானது. இந்தப் பாடலுக்கு அருண்ராஜா காமராஜ் வரிகளை எழுத சுப்லாக்‌ஷினி பாடியுள்ளார்.

யூடியூபில் பட்டாம்பூச்சி பாடல், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் சேர்த்து 5.2 கோடி பார்வைகளைக் கடந்துள்ளதாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.

Summary

The song Pattampoochi from the movie Viswanath and Sons, starring actor Suriya, has crossed 52 million views.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.