ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டுத் தேதி!

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டுத் தேதி குறித்து...

Viswanath and Sons

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் - படம் - எக்ஸ்

Published On :5 ஆகஸ்ட் 2026, 9:42 pm IST

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

இயக்குநர் வெங்கட் அட்லுரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். கதாநாயகியாக மமிதா பைஜு நடித்துள்ளார். நடிகர்கள் ராதிகா, ரவீனா தண்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கோவையில் பெரியளவில் நடைபெற்றது. இதில் நடிகர் சூர்யா உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். அங்கு, ஜிவி பிரகாஷ் இப்படத்தின் பாடல்களைப் பாடினார்.

இந்த நிலையில், படத்தின் டிரைலர் வரும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தத் திரைப்படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், கருப்பு திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, வெளியாகும் படமென்பதால் சூர்யா ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

சூர்யாவின் இந்தப் படம் வெளியாகும் இதே நாளில் நயன்தாரா, கவின் நடித்துள்ள ஹாய் திரைப்படமும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

The announcement regarding the trailer of the movie Viswanath and Sons has been released today.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.