ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மூடர் கூடம் 2 படத்தின் முதல் பார்வை போஸ்டர்!

இயக்குநர் நவீன் இயக்கத்தில் உருவாகியுள்ள மூடர் கூடம் 2 திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் குறித்து...

Poster of the movie Moodar Koodam 2.

மூடர் கூடம் 2 படத்தின் போஸ்டர். - படம்: எக்ஸ் / நவீன் ஹிதாயத்.

Published On :5 ஆகஸ்ட் 2026, 2:22 pm IST

இயக்குநர் நவீன் இயக்கும் மூடர் கூடம் 2 திரைப்படத்தின் முதல்பார்வை போஸ்டர் இன்று (ஆக.5) வெளியாகியுள்ளது.

மூடர் கூடம் (2013) திரைப்படத்தின் மூலமாக நவீன் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் அறிமுகமானார். இந்தப் படம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

மூடர் கூடம் திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் நவீன் கொளஞ்சி படத்திற்கு கதை, வசனம் எழுதி இருந்தார். பின்னர், விஜய் ஆண்டனியை வைத்து அக்னிச் சிறகுகள் படத்தை இயக்கி இருந்தார்.

தெலுங்கில் நாகார்ஜுனாவை வைத்து அவரது 100ஆவது படத்தை நவீன் இயக்குவதாக இருந்தது. பின்னர், தயாரிப்பு பிரச்னைகளால் இந்தப் படம் கைவிடப்பட்டதாகக் கூறப்பட்டது.

இந்த நிலையில், மூடர் கூடம் இரண்டாம் பாகத்தின் முதல்பார்வை போஸ்டரை இயக்குநர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கிராண்டல் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் சென்ட்ராயன், ஓவியா, ராஜ மாணிக்கம், சூரஜ் நல்லுசாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போதும் இந்தப் படத்தின் நகைச்சுவைக் காட்சிகள் சமூக வலைதளத்தில் பிரபலமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தினை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணலாம்.

Summary

First-look poster of the movie Moodar Koodam 2!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.