ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மீண்டும் மாரியம்மாவாக நடிக்கக் காத்திருக்கிறேன்: துஷாரா விஜயன்

சர்பட்டா - 2 திரைப்படம் குறித்து தகவல்களைப் பகிர்ந்த துஷாரா விஜயன்...

arya and dushara vijayan

ஆர்யாவுடன் துஷாரா விஜயன்

Published On :1 ஆகஸ்ட் 2026, 2:56 pm IST

நடிகை துஷாரா விஜயன் சார்பட்டா - 2 திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.

இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் நடிகர்கள் ஆர்யா, துஷாரா விஜயன் நடிப்பில் உருவான சார்பட்டா பரம்பரை திரைப்படம் 2021 இல் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

திரையரங்க வெளியீடாக வந்திருக்க வேண்டிய படம் ஓடிடியில் வந்துவிட்டதே என பலரும் ஆதங்கம் தெரிவித்தனர். காரணம், குத்துச் சண்டையை மையமாக வைத்து கதை உருவாகியிருந்தாலும் ஹிந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் என சில அரசியல்களையும் பேசியிருந்தது.

தற்போது, சார்பட்டா - 2 பணிகள் ஆரம்பமாகியுள்ளன. இதிலும், ஆர்யாவே நாயகனாக நடிக்கிறார். இதுவும் தமிழக அரசியலின் முக்கியமான காலகட்டத்தைப் பேசும் முதல் பாகத்திற்கு முந்தைய கதையாக உருவாகவுள்ளது.

இந்த நிலையில், இப்படம் குறித்து பேசிய நடிகை துஷாரா விஜயன், “சார்பட்டா - 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்கவுள்ளது. மிகவும் ஆவலாக, மீண்டும் மாரியம்மாக கதாபாத்திரத்தில் நடிக்கக் காத்திருக்கிறேன். சர்பட்டா முதல் பாகத்தின் கதைக்கு முந்தைய கதையாக இது உருவாகிறது. கரோனாவால் சர்பட்டா நேரடியாக ஓடிடியில் வெளியானது. ஆனால், இரண்டாம் பாகம் திரையரங்குகளில்தான் வெளியாகும்” எனத் தெரிவித்துள்ளார்.

Actress Dushara Vijayan has spoken about the movie Sarpatta 2.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.