திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

இளையராஜா சரியாக பேசுவதில்லை: கங்கை அமரன் ஆதங்கம்

இளையராஜா குறித்து கங்கை அமரன் பேச்சு...

News image

இளையராஜாவுடன் கங்கை அமரன்

Updated On :8 ஏப்ரல் 2026, 12:42 pm IST

இசையமைப்பாளர் இளையராஜா தன்னிடம் சரியாக பேசுவதில்லை என கங்கை அமரன் ஆதங்கப்பட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் 49 ஆண்டுகளாக இயங்கிக்கொண்டிருப்பவர் கங்கை அமரன். பாடலாசிரியர், இசையமைப்பாளர், இயக்குநர் என அழுத்தமான பங்களிப்பைச் செய்தவர். தற்போது, லெனின் பாண்டியன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், அண்மையில் நடைபெற்ற பருந்து திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கங்கை அமரன் கலந்துகொண்டார்.

நிகழ்வில் பேசியவர், “இப்போதெல்லாம் நானும் என் அண்ணன் இளையராஜாவும் அண்ணன் - தம்பி மாதிரியே இல்லை. நான் பார்க்கச் சென்றாலும், ஒரு வார்த்தைகூட பேசாமல் எழுந்து நின்று அப்படியே மெதுவாக சுற்றுகிறார். என்ன என பார்வையிலேயே கேட்கிறார். சரியாக பேசுவதில்லை. தற்போது, இரண்டாவது சிம்பொனியை எழுதிக்கொண்டிருக்கிறார். இதை நிகழ்த்தும்போது நான் கூட இருக்க வேண்டும் என கேட்டிருக்கிறேன். அவருக்கு இசையைத் தவிர வேறு எதுவும் முக்கியம் இல்லை. தன் ஞானத்தை இன்றுவரை சிதறாமல் வைத்திருக்கிறார்.

யூடியூபில் பலரும் இளையராஜா பாடல்களைத் தேடுகிறார்கள். நானும் சினிமாவுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆகப்போகிறது. நிறைய பாடல்களை எழுதியதுடன் இசையமைத்திருக்கிறேன். அதையும் ரசிகர்கள் கேட்க வேண்டும். எனக்குப் பின் சினிமாவுக்கு வந்த பாக்யராஜ் 50 ஆண்டுகள் சினிமாவில் நிறைவு செய்ததாக விழா எடுத்துள்ளார். இது எப்படி எனத் தெரியவில்லை.” எனக் கூறினார்.

Summary

Gangai Amaran has expressed his grievance that Ilaiyaraaja does not speak to him properly.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.