மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

இளையராஜா சரியாக பேசுவதில்லை: கங்கை அமரன் ஆதங்கம்

இளையராஜா குறித்து கங்கை அமரன் பேச்சு...

News image

இளையராஜாவுடன் கங்கை அமரன்

Updated On :8 ஏப்ரல் 2026, 7:12 am

இசையமைப்பாளர் இளையராஜா தன்னிடம் சரியாக பேசுவதில்லை என கங்கை அமரன் ஆதங்கப்பட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் 49 ஆண்டுகளாக இயங்கிக்கொண்டிருப்பவர் கங்கை அமரன். பாடலாசிரியர், இசையமைப்பாளர், இயக்குநர் என அழுத்தமான பங்களிப்பைச் செய்தவர். தற்போது, லெனின் பாண்டியன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், அண்மையில் நடைபெற்ற பருந்து திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கங்கை அமரன் கலந்துகொண்டார்.

நிகழ்வில் பேசியவர், “இப்போதெல்லாம் நானும் என் அண்ணன் இளையராஜாவும் அண்ணன் - தம்பி மாதிரியே இல்லை. நான் பார்க்கச் சென்றாலும், ஒரு வார்த்தைகூட பேசாமல் எழுந்து நின்று அப்படியே மெதுவாக சுற்றுகிறார். என்ன என பார்வையிலேயே கேட்கிறார். சரியாக பேசுவதில்லை. தற்போது, இரண்டாவது சிம்பொனியை எழுதிக்கொண்டிருக்கிறார். இதை நிகழ்த்தும்போது நான் கூட இருக்க வேண்டும் என கேட்டிருக்கிறேன். அவருக்கு இசையைத் தவிர வேறு எதுவும் முக்கியம் இல்லை. தன் ஞானத்தை இன்றுவரை சிதறாமல் வைத்திருக்கிறார்.

யூடியூபில் பலரும் இளையராஜா பாடல்களைத் தேடுகிறார்கள். நானும் சினிமாவுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆகப்போகிறது. நிறைய பாடல்களை எழுதியதுடன் இசையமைத்திருக்கிறேன். அதையும் ரசிகர்கள் கேட்க வேண்டும். எனக்குப் பின் சினிமாவுக்கு வந்த பாக்யராஜ் 50 ஆண்டுகள் சினிமாவில் நிறைவு செய்ததாக விழா எடுத்துள்ளார். இது எப்படி எனத் தெரியவில்லை.” எனக் கூறினார்.

Summary

Gangai Amaran has expressed his grievance that Ilaiyaraaja does not speak to him properly.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.