முதன் முதலில் அதிகம் ட்ரோல் செய்யப்பட்ட படம் அஞ்சான்: லிங்குசாமி
அஞ்சான் மறுவெளியீடு குறித்து லிங்குசாமி...
அஞ்சான் மறுவெளியீடு குறித்து லிங்குசாமி...
By இணையதளச் செய்திப் பிரிவு
Sivashankar
இயக்குநர் லிங்குசாமி அஞ்சான் திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.
நடிகர் சூர்யா - இயக்குநர் லிங்குசாமி கூட்டணியில் உருவாகி கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “அஞ்சான்”. இந்தப் படத்தில், நடிகர்கள் வித்யூத் ஜம்வால், மனோஜ் பாஜ்பாயி, சமந்தா, சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று விமர்சனத்திற்குள்ளானது. ஆனால், சில ரசிகர்களிடம் பாராட்டுகளையும் பெற்றது.
தற்போது, அஞ்சானின் எடிட் செய்யப்பட்ட புதியு வடிவம் நாளை (நவ. 28) மறுவெளியீடாகிறது.
இந்த நிலையில், இதற்கான நிகழ்வில் பேசிய இயக்குநர் லிங்குசாமி, “அஞ்சான் திரைப்படம் 11 ஆண்டுகளுக்கு முன் வெளியானபோது மிகப்பெரிய கேலி, கிண்டல்களைச் சந்தித்தது. இன்று, நிறைய படங்கள் ட்ரோல் செய்வதற்கு முன்பே அதிகம் ட்ரோல் ஆன திரைப்படம் அஞ்சான்தான். ஆனால், நான் சந்தித்த பல ரசிகர்கள் அஞ்சான் தங்களுக்குப் பிடித்திருந்தாகவே சொன்னார்கள். ஒரு படத்தை எடுப்பது மட்டுமே இயக்குநர் கையில் உள்ளது.
அது என்னவாக மாறும் என்பது தெரியாது. அஞ்சானை மறுவெளியீடு செய்யத் திட்டமிட்டபோது மீண்டும் சவால் விடுவதற்காக அல்ல. வெற்றியும் தோல்வியும் முக்கியமல்ல. உண்மையான சூர்யா ரசிகர்கள் கொண்டாட வேண்டும் என்பதற்காகவும் ஒரு திருப்திக்காகவும் அஞ்சானை மறுவெளியீடு செய்கிறோம். இப்படம் 2 மணி நேரம் ஓடக்கூடிய வடிவமாகத் திரைக்கு வருகிறது”
இதையும் படிக்க: ‘டியூட்’ படப் பாடல்களை நீக்கக் கோரி இளையராஜா வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது