2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

சஞ்சய் காந்தி பயோபிக் படத்தில் நடிக்கத் திட்டமிட்ட சூர்யா... ஆனால்!

நடிகர் சூர்யாவின் புதிய படம் குறித்து...

News image
சஞ்சய் காந்தி, சூர்யா
Updated On :29 ஜூன் 2025, 5:27 am

DIN

நடிகர் சூர்யா மறைந்த அரசியல்வாதி சஞ்சய் காந்தியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் நடிக்கத் திட்டமிட்டிருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா ரெட்ரோ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில் கருப்பு என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வரும் எனத் தெரிகிறது.

தற்போது சூர்யா, வெங்கட் அட்லூரி இயக்கத்தில் தன் 46-வது படத்தில் இணைந்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய வெங்கட் அட்லூரி, “மறைந்த காங்கிரஸ் அரசியல்வாதி சஞ்சய் காந்தியின் வாழ்க்கை வரலாற்றை சூர்யா - 46 திரைப்படமாக எடுக்க முயற்சி செய்தோம். ஆனால், சஞ்சய் காந்தியின் பயோபிக் உரிமத்தைப் பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டது.

சூர்யாவும் சூரரைப் போற்று, ஜெய்பீம் என இரு உண்மைக் கதைகளில் நடித்துவிட்டார். அதனால், வேறு ஒரு கதையையே தற்போது எடுத்து வருகிறோம். இது, குடும்பங்கள் ரசிக்கும் படமாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யா, சஞ்சய் காந்தியின் பயோபிக் கதையில் நடிக்க ஆர்வம் காட்டியது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

summary

suriya plans to act sanjay gandhi biopic

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.