பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

இந்த அங்கீகாரம் என்னைச் செதுக்கியவர்களுக்கு... கமல் ஹாசன் பெருமிதம்!

ஆஸ்கர் அங்கீகாரம் குறித்து கமல் ஹாசன் பெருமிதம்...

News image

கமல் ஹாசன்

Updated On :29 ஜூன் 2025, 6:06 am

ஆஸ்கர் குழுவில் இணைந்த கமல் ஹாசன் அதற்காக பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகர் கமல் ஹாசன் இந்திய சினிமாவின் மிகச்சிறந்த கலைஞராக இருந்தாலும் உலகளவில் அவருக்கான அங்கீகாரங்கள் பெரிதாக அமையவில்லை. மொழி ரீதியான சிக்கல்கள், வியாபார காரணங்கள் உள்ளிட்டவையால் இந்த கவனம் கிடைக்காமல் போனது.

இருப்பினும், உலகளவில் திரைப்பட விருது விழாக்களில் பங்கேற்கும் இந்திய திரைத்துறையினர் கமல் ஹாசன் குறித்து பெருமிதமாக பேசுவது ரசிகர்களிடம் உற்சாகத்தை அளித்து வந்தது.

இந்த நிலையில், ஆஸ்கர் அகாதெமி குழு இந்தமுறை ஆஸ்கர் விருது தேர்வில் வாக்களிக்க நடிகர் கமல் ஹாசன் உள்பட ஹிந்தி நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா, பாயல் கபாடியா, அமெரிக்க நடிகை அரியானா கிராண்டி என 534 பேருக்கு அழைப்பு விடுத்திருக்கிறது.

இதற்காக, நடிகர் கமல் ஹாசனுக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். தற்போது, இதுகுறித்து கமல் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “ஆஸ்கர் அகாதெமியில் இணைவதைப் கௌரவமாகக் கருதுகிறேன். இந்த அங்கீகாரம் எனக்கானது அல்ல, இந்திய சினிமா துறைக்கும் என்னைச் செதுக்கிய கணக்கில்லா கதை சொல்லிகளுக்குமானது. இந்திய சினிமா உலகிற்கு நிறைய தரவுள்ளது. என்னுடன் தேர்வான பிற கலைஞர்களுக்கும் வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.

Story image

Summary

actor kamal haasan about oscar academy for his selection

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.