சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

அய்யனார் துணை நடிகருக்கு ஆண் குழந்தை!

அய்யனார் துணை நடிகர் ஜெபின் ஜானுக்கு ஆண் குழந்தைப் பிறந்துள்ளது.

News image

அய்யனார் துணை தொடரிலிருந்து... - இன்ஸ்டாகிராம்

Updated On :26 ஜூன் 2025, 11:26 am

அய்யனார் துணை நடிகர் ஜெபின் ஜானுக்கு ஆண் குழந்தைப் பிறந்துள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அய்யனார் துணை தொடரில் எதிர்நீச்சல் பிரபலம் மதுமிதா நாயகியாக நடித்து வருகிறார். இவரின் சகோதரன் பாத்திரத்தில் நடிகர் ஜெபின் ஜான் நடித்து வருகிறார்.

இவர் இதற்கு முன்னர் என் இதயம், வித்யா நம்பர் 1, செல்லம்மா உள்ளிட்ட தொடர்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர்.

ஜெபின் ஜான் - மீனு

ஜெபின் ஜான் - மீனு

தற்போது, அய்யனார் துணை தொடரில் இவர் நடித்துவரும் பாத்திரத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இவரின் அழுத்தமான நடிப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இதனிடையே, நடிகர் ஜெபின் ஜான் அவரது நீண்ட நாள் காதலி மீனுவை கடந்த 2023 ஆம் ஆண்டு உற்றார் உறவினர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், ஜெபின் ஜான் - மீனு தம்பதியினருக்கு ஆண் குழந்தைப் பிறந்துள்ளதை அவர்கள் இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் அறிவித்துள்ளனர்.

இவர்களுக்கு ரசிகர்கள், சின்ன திரை பிரபலங்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Summary

Ayyanar thunai serial actor Jebin John has given birth to a baby boy.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.