அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

விஜய் சேதுபதி படத்தில் ரோஷினி ஹரிப்ரியன்!

சின்ன திரை நடிகை ரோஷினி ஹரிப்ரியன் விஜய் சேதுபதி படத்தில் நடித்துள்ளார்.

News image
விஜய் சேதுபதி / ரோஷினி ஹரிப்ரியன்- படம் | இன்ஸ்டாகிராம்
Updated On :23 பிப்ரவரி 2025, 11:11 am

DIN

சின்ன திரை நடிகை ரோஷினி ஹரிப்ரியன் விஜய் சேதுபதி படத்தில் நடித்துள்ளார்.

இதற்கு முன்பு சூரி நடிப்பில் வெளியான கருடன் படத்தில் நடித்திருந்த நிலையில், தற்போது விஜய் சேதுபதி படத்தில் நடித்து வருகிறார்.

விஜய் தொலைக்காட்சியில் 2019-ல் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா தொடரில் நாயகியாக நடித்ததன் மூலம் சின்ன திரையில் அறிமுகமானவர் ரோஷினி ஹரிப்ரியன். 2021 வரை இந்தத் தொடர் ஒளிபரப்பானது.

இத்தொடரில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலும் நடித்தார். சிறப்புத் தோற்றத்தில் சில நாள்களுக்கு மட்டுமே இதில் நடித்திருந்தார்.

பட வாய்ப்புகளுக்காக முயற்சித்துக்கொண்டிருந்த வேளையில், மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் வாய்ப்பு கிடைத்தது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சமையல் கலைஞராக பங்கேற்று மக்கள் மனங்களைக் கவர்ந்தார்.

அதில் கிடைத்த ரசிகர்கள் பட்டாளம் இவருக்கு வெள்ளித்திரை வாய்ப்பையும் பெற்றுத்தந்தது. சூரி நாயகனாக நடித்த கருடன் படத்தில் ரோஷினி நடித்திருந்தார். இதில், இவரின் நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தற்போது விஜய் சேதுபதி - இயக்குநர் பாண்டிராஜ் கூட்டணியில் உருவாகிவரும் புதிய படத்தில் ரோஷினி நடித்துவருகிறார்.

இதில் நித்யா மெனன் முதன்மை நாயகியாக நடிக்க, ரோஷினி முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. ரசிகர்கள் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.