ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

புரிய வேண்டியவங்களுக்குப் புரியும் குமாரு: செல்வராகவன் கூறுவது என்ன?

இயக்குநர் செல்வராகவனின் எக்ஸ் பதிவு ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

News image

செல்வராகவன் - படம்: இன்ஸ்டாகிராம்

Updated On :1 மார்ச் 2024, 7:22 am

இயக்குநர் செல்வராகவனின் எக்ஸ் பதிவு ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமானவர் இயக்குநர் செல்வராகவன். காதல் கொண்டேன், மயக்கமென்ன, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் போன்ற திரைப்படங்களை இயக்கியவர். இவரது இயக்கத்தில் கடைசியாக தனுஷுடன் நானே வருவேன் படம் வெளியானது.

இவர் நடிகை சோனியா அகர்வாலை 2006இல் திருமணம் செய்து 2010இல் விவாகரத்து செய்தார். பின்னர் கீதாஞ்சலி ராமனை 2011இல் திருமணம் செய்தார். இவர்களுக்கு 3 குழந்தைகள் இருக்கிறார்கள். அடிக்கடி விவாகரத்து குறித்து தகவல்கள் பரவுவது இவரது விஷயத்தில் பழக்கமாகிவிட்டது. ஆனால் இவர் மகிழ்ச்சியான வாழ்க்கையையே வாழ்ந்து வருகிறார்.

Story image

இயக்குநர் செல்வராகவன் தற்போது படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தனுஷுன் ராயன் படத்திலும் நடித்துள்ளார். விரைவில் புதுப்பேட்டை 2 வருமென சமீபத்தில் கூறியிருந்தார். செல்வராகவன் எக்ஸில் அடிக்கடி பதிவிட்டு வருவது வழக்கம்.

இந்நிலையில் இன்று, “சொல்வதை ஒரு தலைப்போடு சொல்லலாம் எனத் தோன்றியது. புரிய வேண்டியவங்களுக்குப் புரியும் குமாரு” எனப் பதிவிட்டுள்ளார்.

ஒன்றுமே புரியவில்லை என ரசிகர்கள் குழப்பமடைந்து, செல்வராகவனை கிண்டல் செய்து வருகிறார்கள். சிலர் புதுப்பேட்டை 2 படத்தின் அப்டேட் ஆக இருக்கலாம் எனவும் கமெண்டுகளில் தங்களது கருத்தினை தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.