எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

அமரன் படத்தில் சிவகார்த்திகேயன் இறந்துவிடுவாரா? யாரிந்த முகுந்த் வரதராஜன்?

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அமரன் படத்தின் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

News image
Updated On :17 பிப்ரவரி 2024, 6:20 am

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அமரன் படத்தின் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

சிவகார்த்திகேயன் தன் 21வது படமாக கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார். சாய் பல்லவி நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

இந்தப் படத்துக்கு அமரன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. நேற்று அமரன் படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் முகுந்த் வி என்ற பாத்திரத்தில் ராணுவ அதிகாரியாக நடிக்கிறார்.

யார் இந்த முகுந்த் வரதராஜன்?

ஜம்மு-காஷ்மீரில் கடந்த 2014-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது, அவர்களை எதிர்த்து தாக்குதல் நடத்திய, ‘ராஷ்ட்ரீய ரைஃபிள்ஸ் ராஜ்புத் ரெஜிமெண்ட்' பிரிவுக்கு தமிழகத்தை சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன் தலைமை தாங்கினார். அப்போது பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த வீட்டைத் தாக்கி, அது தீப்பற்றி எரிந்ததும், தப்பியோடிய பயங்கரவாதிகளில் இருவரை முகுந்த் கொன்றார்.

இதைத் தொடர்ந்து, தப்பியோடி வேறு வீட்டில் பதுங்கிய மற்ற பயங்கரவாதிகள் மீதும் முகுந்த் தாக்குதல் நடத்தினார். அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதி சுட்டதில் முகுந்த் உடலில் குண்டு பாய்ந்தது. இருப்பினும் தீரத்துடன் போராடி மூன்றாவது பயங்கரவாதியையும் அவர் சுட்டுக் கொன்றார். அதையடுத்து, குண்டுக் காயம் அடைந்த முகுந்த் வரதராஜனும் உயிரிழந்தார். அவரது வீர மரணத்தை போற்றும் வகையில் அவருக்கு அசோக சக்ரா விருது அறிவிக்கப்பட்டது.

Story image

புது தில்லியில் குடியரசு தின விழாவில் இந்த விருதை முகுந்த் வரதராஜனின் மனைவி இந்துவிடம் அன்றைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார். முகுந்த் மறைவுக்குப் பிறகு இந்துவுக்கு ராணுவப் பள்ளியில் ஆசிரியை பணியை மத்திய அரசு வழங்கியது.

இதில் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயனும் அவரது மனைவியாக சாய் பல்லவியும் நடித்துள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

சிவகார்த்திகேயன் இறந்து விடுவார் என்பதால் அவரது ரசிகர்கள் சோகத்தில் இருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.