தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

லவ்வர் படம் பார்க்கும்போது சில நிமிடங்களுக்குப் பிறகு...: செல்வராகவன் கூறியது என்ன?

நடிகர் மணிகண்டன் நடிப்பில் வெளியான 'லவ்வர்' படக்குழுவுக்கு சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது.

News image
Updated On :17 பிப்ரவரி 2024, 5:18 am

காதலும் கடந்து போகும், காலா, ஏலே, சில்லுக்கருப்பட்டி, விக்ரம் வேதா, ஜெய்பீம் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர் மணிகண்டன். குட் நைட் படத்தில் கதாநாயகனாக  நடித்து வெற்றி பெற்றார்.

அதன் வெற்றிக்குப் பிறகு நடிகர் மணிகண்டன் நடித்த 'லவ்வர்' படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இதனை அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கியுள்ளார். நாயகியாக ஸ்ரீ கௌரி ப்ரியா நடித்துள்ளார்.

இந்நிலையில் இயக்குநர் செல்வராகவன் தனது எக்ஸ் பக்கத்தில், “லவ்வர் திரைப்படம் பார்த்தேன். பிடித்திருந்தது. இந்தக் காலத்து காதலை சிறப்பாக காட்டியிருந்தார்கள். சில நிமிடங்களுக்குப் பிறகு நான் படம் பார்க்கிறேன் என்பதையே மறந்துவிட்டேன். மிகவும் எதார்த்தமாக இருந்தது. மணிகண்டன், ஸ்ரீ கௌரி பிரியா அருமையாக நடித்திருந்தார்கள்“ எனப் பதிவிட்டுள்ளார்.

செல்வராகவனின் 7ஜி ரெயின்போ காலணி, மயக்கம் என்ன ஆகிய காதல் சார்ந்த திரைப்படங்கள் 90களில் பிறந்தவர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.