தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

அரசியல் காரணங்களால் தேசிய விருதில் சார்பட்டா புறக்கணிப்பு: பா.இரஞ்சித் குற்றச்சாட்டு!

இயக்குநர் பா.இரஞ்சித் சார்பட்டா பரம்பரை படத்துக்கு வேண்டுமென்றே தேசிய விருதுகள் புறக்கணிக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.

News image

சார்பட்டா பரம்பரை போஸ்டர், பா.இரஞ்சித்.

Updated On :23 ஆகஸ்ட் 2024, 7:17 am

இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவான சார்பட்டா பரம்பரை திரைப்படம் 2021-ல் ஓடிடியில் நேரடியாக வெளியானாலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து சமீபத்தில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதிலும் நாயகனாக ஆர்யாவே நடிக்கிறார்.

Story image

இதற்காக, ஆர்யா கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். தங்கலான் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் இயக்குநர் பா. இரஞ்சித் பேசியதாவது:

சார்பட்டா பரம்பரை வெற்றிப் பெற்ற படமாக நாம் கொண்டாடும் அதே சமயத்தில் அதன் இரண்டாம் பாதி சரியில்லை என பலரும் விமர்சனம் செய்ததை பார்த்தோம். விருது விழாக்களில் சார்பட்டா பரம்பரை படம் வெளிப்படையாக நிராகரிக்கப்பட்டது.

கிரிட்டிக்ஸ் விருதில் சார்பட்டா பரம்பரை பல விருதுகள் பெற்றன. அப்படி வாங்கினால் நிச்சயமாக தேசிய விருதும் தருவார்கள். ஆனால் நம்முடைய தேசிய விருது பட்டியலில் சார்பட்டா பரம்பரை உள்ளேயே போக முடியவில்லை.

இந்த விருதுகளுக்கு சார்பட்டா பரம்பரை தகுதியில்லாததா? தனது கருத்தின் அடிப்படையில் இதை நிராகரிக்கிறார்கள். படத்துக்கு வெளியே நான் பேசும் கருத்துகளின் அடிப்படையில் இதையெல்லாம் ஒருவன் தீர்மானிக்கிறான்.

வேண்டுமென்றே எனது வேலையை மதிக்கக் கூடாதென சிலர் திட்டமிட்டு செயல்படுகிறார்கள். இந்த வெறுப்பை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது என்றார்.

தங்கலான் திரைப்படத்தில் தங்கம் பூர்வக்குடிக்கு சொந்தமானது என்று படமாக்கியுள்ளார். இது நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.