15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

4 ஆவது கணவரையும் விவாகரத்து செய்த ஜெனிஃபர் லோபஸ்!

பிரபல ஹாலிவுட் நடிகை ஜெனிஃபர் லோபஸ் விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளார்.

News image

ஜெனிஃபர் லோபஸ் - படம்: வெரைட்டி

Updated On :21 ஆகஸ்ட் 2024, 12:06 pm

ஹாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளுல் ஒருவராக இருப்பவர் ஜெனிஃபர் லோபஸ். 55 வயதாகும் ஜெனிஃபர் லோபஸ் 1986 முதல் நடித்து வருகிறார்.

40 ஆண்டுகளாக நடித்து வரும் இவர் ஒரு படத்துக்கு 20 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.167 கோடி) சம்பளமாக வாங்குகிறார்.

ஜெனிஃபர் லோபஸ்

ஜெனிஃபர் லோபஸ் - படம்: இன்ஸ்டா / ஜெனிஃபர் லோபஸ்

நடிப்பு மட்டுமல்லாமல் நடனதுக்கும் பிரபலமானவர் ஜெனிஃபர் லோபஸ். இசையில் லத்தீன் அமெரிக்க பாப் கலாச்சாரத்தை புகுத்தியதில் முக்கிய பங்கு வகிக்கிறார்.

தனது 4ஆவது கணவர் பென் அப்ஃளெக்கை விவாகரத்து செய்ய விண்ணப்பித்துள்ளார். 1997இல் ஜானி நோவாவுடன் திருமணம் செய்து 1998ல் விவாகரத்து செய்தார். பின்னர் கிறிஸ் ஜூட் உடனும் (2001- 2003), மார்க் ஆண்டணி (2004-2014) உடன் விவாகரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

ஜெனிஃபர் லோபஸ்-பென் அப்ஃளெக்

ஜெனிஃபர் லோபஸ்-பென் அப்ஃளெக் - படம்: தி நியூயார்க் டைம்ஸ்

பிரபல நடிகரும் இயக்குநருமான பென் அப்ஃளெக்கை கடந்த 2022இல் திருமணம் செய்தார். சிறிது காலமாகவே (ஏப்.26 முதல்) பிரிந்து வாழ்வதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் தற்போது இது உறுதியாகியுள்ளது.

கடைசியாக இவர் நடிப்பில் வெளியான அட்லஸ் வசூலில் கலக்கியது.

தற்போது ஜெனிஃபர் லோபஸ் நடிப்பில் அன்ஸ்டாபபள், கிஸ் ஆஃப் தி ஸ்பைடர் வுமன் ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.