பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

வதந்திகளுக்கு பதிலளித்த மிருணாள் தாக்குர்!

நடிகை மிருணாள் தாக்குர் தெலுங்கு படம் குறித்த வதந்திகளுக்கு பதிலளித்துள்ளார்.

News image

நடிகை மிருணாள் தாக்குர் - படங்கள்: இன்ஸ்டா / மிருணாள் தாக்குர்

Updated On :15 ஆகஸ்ட் 2024, 10:20 am

மராத்திய திரைப்படங்களில் அறிமுகமான நடிகை மிருணாள் தாக்குர் தமிழ் ரசிகர்களுக்கு சீதா ராமம் படத்தின் மூலம் கவனம் பெற்றார்.

துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்த சீதா ராமம் திரைப்படம் பான் இந்தியப் படமாக வெளியாகி மிகப் பெரிய வெற்றியை பெற்றது.

இதற்கடுத்து லஸ்ட் ஸ்டோரிஸ் 2 தொடரில் நடித்து மிருணாள் தாக்குர் புகழ் பெற்றார்.

தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் பரசுராம் பெட்லா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் மிருணாள் தாக்குர் நடித்துள்ள ஃபேமிலி ஸ்டார் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றன.

தற்போது ஹிந்தியில் 3 திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

தெலுங்கில் ஹனு ராகவபுடி இயக்கத்தில் நடிகர் பிரபாஸுடன் பௌஜி என்ற படத்தில் மிருணாள் தாக்குர் நடிப்பதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் இது குறித்து, “உங்கள் கொண்டாட்டத்தைக் கெடுப்பதற்கு மன்னிக்கவும். நான் இந்தப் படத்தில் நடிக்கவில்லை” எனக் கூறியுள்ளார்.

பிரபாஸின் கல்கி 2898 ஏடி படத்தில் மிருணாள் தாக்குர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. பிரபாஸ் தற்போது தி ராஜ் சாப் படத்தில் நடித்து வருகிறார். அடுத்து அனிமல் பட இயக்குநர் இயக்கத்தில் நடிக்கவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.