மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

யாரும் வளர்த்துவிடவில்லையா? சிவகார்த்திகேயனை விமர்சிக்கும் தனுஷ் ரசிகர்கள்!

தனுஷ் ரசிகர்கள் நடிகர் சிவகார்த்திகேயனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2024, 8:31 am

தனுஷ் ரசிகர்கள் நடிகர் சிவகார்த்திகேயனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

சினிமாவில் வாய்ப்புகளுக்காக முயன்றுகொண்டிருந்தபோது நடிகர் சிவகார்த்திகேயனுக்கு 3 படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தை தனுஷ் வழங்கினார். இதில், சிவகார்த்திகேயன் இடம்பெற்ற நகைச்சுவைக் காட்சிகள் பெரியளவில் கவனம் பெற்றன.

தொடர்ந்து, தனுஷ் தன் தயாரிப்பு நிறுவனமான ஒண்டர்பார் ஃபிலிம்ஸ் மூலம் எதிர்நீச்சல் படத்தை தயாரித்தார். இப்படத்தில், நாயகனாக நடித்த சிவகார்த்திகேயனுக்கு பெரிய வெற்றி கிடைத்தது.

தொடர்ந்து, நட்சத்திர நடிகரான பிறகும் சில நேர்காணல்களில் தனுஷ் தன்னை நம்பி எதிர்நீச்சல் படத்தை தயாரித்தது குறித்து பெருமையாகவே சிவகார்த்திகேயன் கூறிவந்தார்.

இந்த நிலையில், கொட்டுக்காளி படத்தின் தயாரிப்பாளராக அதன் டிரைலர் நிகழ்வில் பேசிய சிவகார்த்திகேயன், “கூழாங்கல் படத்தைப் பார்த்தபின் இயக்குநர் வினோத் ராஜின் அடுத்த படத்தை நான் தயாரிக்க விரும்பினேன். கொட்டுக்காளியாக உருவான இப்படம் பெரிய அங்கீகாரத்தைப் பெறும்.

இப்படம், வணிக வெற்றியைப் பெற்றால் இன்னும் நல்ல இயக்குநர்களை நான் அடையாளப்படுத்துவேன். நான்தான் இவர்களையெல்லாம் கண்டுபிடித்து வளர்த்து, வாழ்க்கை கொடுத்தேன் என சொல்ல மாட்டேன். பலர் எனக்கு வாழ்க்கை கொடுத்ததாகச் சொல்லி பழகிவிட்டனர். ஆனால், நான் அந்த மாதிரி ஆள் இல்லை” என்றார்.

இதனைப் கேட்ட ரசிகர்கள், தனுஷ் உதவியதை மறந்துவிட்டு நன்றி இல்லாமல் சிவகார்த்திகேயன் பேசுகிறார் எனக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். முக்கியமாக, சிவகார்த்திகேயன் நடிகர் தனுஷ் தனக்கு அளித்த வாய்ப்பை பெருமையாகப் பேசும் பழைய விடியோக்களைப் இணையத்தில் பதிவேற்றி வருகின்றனர்.

உண்மையில், சிவகார்த்திகேயன் யாரைக் குறிப்பிட்டு அப்படி பேசினார் எனத் தெரியாத சூழலிலும் தனுஷ் ரசிகர்கள் ஆத்திரமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.