தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

நடிகர் விக்ரம் இல்லையென்றால்... மாளவிகா மோகனன் பகிர்ந்த அனுபவம்!

நடிகை மாளவிகா மோகனன் நடிகர் விக்ரம் குறித்து பதிவிட்டுள்ளார்.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2024, 7:15 am

நடிகை மாளவிகா மோகனன் நடிகர் விக்ரம் குறித்து பதிவிட்டுள்ளார்.

பிரபலமான ஈரான் இயக்குநர் மஜித் மஜித்தின் இயக்கத்தில் 2017இல் வெளியான பியாண்ட் தி கிளவுட்ஸ் எனும் படத்தில் மாளவிகா அறிமுகமானார்.

தமிழில் நடிகர் ரஜினியின் பேட்ட, விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். தற்போது, பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். 

அடிக்கடி எக்ஸ் தளத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு மாளவிகா மோகனன் பதிலளிப்பார்.

இந்த நிலையில், ரசிகர் ஒருவர் நடிகர் விக்ரமை முதன் முதலாக சந்தித்தது மற்றும் அவருடன் தங்கலான் படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து கேள்வியெழுப்பினார்.

தங்கலான் படத்தில் மாளவிகா மோகனன்!

தங்கலான் படத்தில் மாளவிகா மோகனன்!

அதற்கு மாளவிகா, “நடிகர் விக்ரமை முதலில் சந்தித்தபோது நெருக்கமாக இருந்தேன். ஹாஹஹா.. தங்கலான் படப்பிடிப்பில் சண்டைக்காட்சிகளில் அவருடன் நடித்தபோது நான் செய்த முட்டாள்தனங்களால் சங்கடமாக உணர்ந்தேன். அதுதான், என் முதல் சண்டை படம். ஆனால், அவர் எனக்கு ஆதரவாக இருந்தார். அவர் இல்லாத இந்தப் பயணத்தை கற்பனைகூட செய்ய முடியவில்லை. என்னவொரு மனிதர். எப்போதும் அவர் மீது அன்பும், மரியாதையும் மட்டுமே இருக்கும்” எனப் பதிலளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.