திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

'இதுதான்  நான் சொல்ல விரும்பும் விஷயம்...': அமீருக்கு ஆதரவாக சுதா கொங்கராவின் பதிவு!

இயக்குநர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா விவகாரத்தில் இயக்குநர்  சுதா கொங்கரா தெரிவித்த கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 3:26 am

DIN

இயக்குநர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா விவகாரத்தில் இயக்குநர்  சுதா கொங்கரா தெரிவித்த கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

இவர்களிடையே நீடித்து வரும் பிரச்னையில், சிலர் அமீருக்கு ஆதரவாகவும், சிலர் ஞானவேல் ராஜாவுக்கு ஆதரவாகவும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 

இயக்குநர் அமீருக்கு ஆதரவாக நடிகர் சசிகுமார், இயக்குநர் பொன்வண்ணன், சமுத்திரக்கனி, பாடலாசிரியர் சினேகன் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஞானவேல் ராஜா நேர்காணல் ஒன்றில், "நானும், கார்த்தி மற்றும் சுதா கொங்கராவும் ராம் படத்தைப் பார்க்க சொன்றோம். அப்போது அப்படத்தின் மேக்கிங் சரியில்லை என்று சுதா கொங்கரா கூறினார்" என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இயக்குநர் சுதா கொங்கரா அவரது எக்ஸ் தள பக்கத்தில் இதற்கு பதிலளித்துள்ளார். அதில், "பிப்ரவரி 2, 2016, இயக்குனர் அமீர் அண்ணாவிடமிருந்து எனக்கு ஒரு போன் வந்தது... நான் பிரசாத் ஸ்டுடியோவிற்கு வெளியில் வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன்...  எனக்கு அது நன்றாக நியாபகம் இருக்கிறது, ஏன் என்றால், இறுதி சுற்று படத்திற்காக எனக்கு முதல் முதலாக திரையுலகில் இருந்து போன் செய்து பாராட்டிய சிலரில் அவரும் ஒருவர்... நான் ஒரே ஒரு விஷயம்தான் அவரிடம் சொன்னேன்... என் படத்தில் வந்த மதியின் கதாப்பாத்திரம் முத்தழகின் பாதிப்புதான் என்று.

ஒரு ஆணின் எழுத்துக்களில் ஒரு பெண் கதாப்பாத்திரம் இவ்வளவு முழுமையாக எழுதப்பட்டது அதுவே முதல் முறை என்றும் அவரிடம் சொன்னேன். நான் என் படத்தில் மதி மற்றும் பொம்மி கதாபாத்திரங்களில் நடித்த நடிகைகளிடம் பருத்தி வீரன் படத்தை பார்த்துவிட்டு வருமாரு தான் சொல்லி அனுப்பினேன்.

அதுதான் தமிழ் சினிமாவில்  தடம் பதித்த மிகச்சிறந்த ஓர் இயக்குனருக்கு நான் செய்யும் மரியாதை... இதுதான்  நான் சொல்ல விரும்பும் விஷயம்.. நன்றி..." எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.