அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

'கண்ணான கண்ணே' தொடர் நிறைவுப் பகுதி! ஒளிபரப்பு தேதி, நேரம் அறிவிப்பு!

'கண்ணான கண்ணே' தொடரின் இறுதிக்காட்சி ஒளிபரப்பாகும் நேரம் அறிவிக்கப்பட்டிருந்தாலும், இந்தத் தொடர் முடியவுள்ளதால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 6:37 am

DIN

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'கண்ணான கண்ணே' தொடர் நிறைவுப் பகுதி ஒளிபரப்பாகும் தேதி மற்றும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

சன் தொலைக்காட்சியில் ஏராளமான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றனர். இதில் பல தொடர்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு காணப்படுகிறது. குறிப்பாக பிரைம் டைம் எனப்படும் மாலை நேரங்களில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு அதிக அளவிலான ரசிகர் பட்டாளம் உள்ளது. 

அந்தவகையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'கண்ணான கண்ணே' தொடர் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.     
பப்ளூ பிரித்திவிராஜ், நிமிஷிதா, ராகுல் ரவி ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். 

நிமிஷிதாவுக்கு சமூக வலைதளங்களில் அதிக அளவு ரசிகர்கள் உள்ளதால், இந்த தொடருக்கு இளைய தலைமுறையினரும் ரசிகர்களாக உள்ளனர். 

Story image

குடும்பத்தில் பலரின் செல்லப் பெண்ணாக வளரும் மீரா (நிமிஷிதா) தந்தை பாசத்துக்கு ஏங்குகிறார். ஆனால், கணவனாக வரும் ராகுல் ரவி நாயகிக்கு தந்தையின் பாசத்தை அளிக்கிறார். எனினும் தந்தையின் (பிரித்திவிராஜ்) பாசம் அவளுக்கு கிடைத்ததா? அதற்காக என்னென்ன சவால்களை எதிர்கொண்டால் என்பதை அடிப்படையாக வைத்து 'கண்ணான கண்ணே' தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்தத்தொடருக்கு மகேந்தர், பாரதி கண்ணன் கதை எழுதுகின்றனர். நரசிம்ம மூர்த்தி, நல்லம் ஆகியோர் வசனம் எழுத தனுஷ் இயக்குகிறார்.

தந்தையுடன் நாயகி சேர்ந்துவிட்டதால், இந்தத் தொடர் விரைவில் முடியவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு ஏற்ப புதிய தொடர்களும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளன. 

இந்நிலையில், மார்ச் 4ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு 'கண்ணான கண்ணே' தொடரின் இறுதி எபிஸோட் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

'கண்ணான கண்ணே' தொடரின் இறுதிக்காட்சி ஒளிபரப்பாகும் நேரம் அறிவிக்கப்பட்டிருந்தாலும், இந்தத் தொடர் முடியவுள்ளதால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.