தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

மீண்டும் ஒளிபரப்பாகவுள்ள சக்திமான் தொடர்!

90களில் குழந்தைகளை மிகவும் ஈர்த்த சக்திமான் தொடரை மீண்டும் ஒளிபரப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

News image
Updated On :31 மார்ச் 2020, 5:30 am

பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று இதிகாச காவியங்களான ராமாயணம், மகாபாரதம் ஆகிய தொலைக்காட்சித் தொடா்களை தூா்தா்ஷன் மீண்டும் ஒளிபரப்பி வருகிறது. இதைத் தொடர்ந்து 90களில் குழந்தைகளை மிகவும் ஈர்த்த சக்திமான் தொடரை மீண்டும் ஒளிபரப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

சக்திமானாக நடித்த முகேஷ் கன்னா இத்தகவலை ட்விட்டரில் தெரிவித்துள்ளார். தூர்தர்ஷனில் சக்திமான் தொடரைக் காண 130 கோடி மக்களுக்கு மீண்டும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அதிகாரபூர்வத் தகவல்களுக்குக் காத்திருங்கள் என்று கூறியுள்ளார். ஏப்ரல் 1 முதல் டிடி நேஷனல் தொலைக்காட்சியில் பிற்பகல் 1 மணிக்கு இத்தொடர் ஒளிபரப்பாகவுள்ளது.

கரோனா தொற்று காரணமாக 21 நாள் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ராமானந்த் சாகா் இயக்கிய ராமாயணத் தொடரையும், பி.ஆா்.சோப்ரா இயக்கிய மகாபாரதத் தொடரையும் தூா்தா்ஷனில் ஒளிபரப்ப வேண்டும் என்று சமூக ஊடகங்கள் வாயிலாக பலா் கோரிக்கை விடுத்தனா். அதன்படி, அந்த தொடா்கள் மீண்டும் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. ராமாயணம் தொடா், மாா்ச் 28-ஆம் தேதி முதல் டிடி நேஷனல் தொலைக்காட்சியில் தினமும் காலை 9 மணி முதல் 10 மணி வரை ஒரு பகுதியும் இரவு 9 மணி முதல் 10 மணி வரை அடுத்த பகுதியும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மகாபாரதம் தொடா், டிடி பாரதி தொலைக்காட்சியில் மாா்ச் 28-ஆம் தேதி முதல் தினமும் நண்பகல் 12 மணிக்கும், இரவு 7 மணிக்கும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ராமாயணம் தொடா், முதன் முதலில் தூா்தா்ஷனில் கடந்த 1987-ஆம் ஆண்டிலும், மகாபாரதம் தொடா் கடந்த 1988-ஆம் ஆண்டிலும் ஒளிபரப்பு செய்யப்பட்டது. சக்திமான் தொடர் டிடி1 தொலைக்காட்சியில் 1997 முதல் 2005 வரை ஒளிபரப்பானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.