திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

ரசிகர்களுடன் நடிகர் மோகன் சந்திப்பு! (விடியோ & படங்கள்)

200 பேருக்கு மட்டுமே அனுமதி அளித்திருந்த நிலையில், 400 க்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்ததாக...

News image
Updated On :9 ஜனவரி 2020, 6:25 am

1980களில் பிரபல நடிகராக வலம் வந்த மோகன், சமீபத்தில் தனது ரசிகர்களைச் சந்தித்து உரையாடியுள்ளார்.

நடிகர் மோகன், கடைசியாக 2008-ல் வெளிவந்த சுட்டபழம் என்கிற தமிழ்ப் படத்தில் நடித்தார். பிறகு அவர் தமிழ்ப் படங்களில் நடிக்காத நிலையில் அவரை நேரில் சந்திக்கவேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் பலரும் நீண்ட நாள்களாகக் கோரிக்கை வைத்து வந்தார்கள். இதையடுத்து அனைவரையும் ஒரே நாளில் சந்தித்து உரையாடியுள்ளார் மோகன்.

சென்னை மைலாப்பூர் வி.ஏ. தெருவில் அமைந்துள்ள நிவேதனம் ஹாலில் தனது ரசிகர்களைச் சந்தித்தார் மோகன். தமிழ்நாடு, இந்தியாவிலிருந்து மட்டுமின்றி மலேசியா, இலங்கை உள்ளிட்ட அண்டை நாடுகளிலிருந்தும் அவரது ரசிகர்கள் மோகனைச் சந்திக்க வந்திருந்தார்கள். 

இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த குழுவினர், 200 பேருக்கு மட்டுமே அனுமதி அளித்திருந்த நிலையில், 400 க்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்புபோல மோகன் மீண்டும் படங்களில் நடிக்கவேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.