ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புவருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?எச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்!
/

மணி ரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் வைரமுத்து பாடல்கள் எழுதுகிறாரா?: ஏ.ஆர். ரஹ்மான் பதில்!

பொன்னியின் செல்வன் படத்தில் யார் பாடல்கள் எழுதுகிறார்கள் என்பதைப் பற்றி...

News image
Updated On :7 ஜனவரி 2020, 10:57 am

தமிழகத்தின் பாரம்பரிய இசையை உலகளவில் கொண்டு செல்லும் நோக்கத்துடன் த ஃப்யூச்சர்ஸ் (Ta Futures) என்கிற ஓர் அமைப்பை உருவாக்கியுள்ளார் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான். அவருடைய பிறந்தநாளான நேற்று, இதன் தொடக்க விழா நடைபெற்றது. 

தமிழ்நாட்டு இசைக்கென்று ஒரு ஒலி உள்ளது. கலாசாரம் உள்ளது. இதை அடுத்தக்கட்டத்துக்குக் கொண்டு செல்வது தான் இந்த அமைப்பின் நோக்கம் என்றார் ரஹ்மான். 

மணி ரத்னம் தற்போது இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் வைரமுத்து பாடல்களை எழுதவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் ரோஜா படத்தில் ஆரம்பித்த மணி ரத்னம் - ஏ.ஆர். ரஹ்மான் - வைரமுத்து கூட்டணி முதல்முறையாகப் பிரிந்துள்ளதாக அறியப்படுகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை, படத்தைத் தயாரிக்கும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை. பாடலாசிரியர் பெயர் இல்லாத படக்குழுப் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. 

இந்நிலையில் த ஃப்யூச்சர்ஸ் தொடக்க விழாவின்போது, தனியார் தொலைக்காட்சிக்கு ஏ.ஆர். ரஹ்மான் அளித்த ஒரு பேட்டியில் பொன்னியின் செல்வன் - வைரமுத்து விவகாரம் குறித்துப் பேசியதாவது:

பொன்னியின் செல்வன் படத்தில் யார் பாடல்கள் எழுதுகிறார்கள் என்பதைப் பற்றி நீங்களே தெரிந்துகொள்வீர்கள். இப்போது எதுவும் சொல்ல முடியாது. இதுகுறித்து எதுவாக இருந்தாலும் மணி ரத்னம் அலுவலகத்திலிருந்து தெரிவிக்கப்படும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.