2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

பெண்களின் உண்மையான சுதந்திரம் எது?

பெண்கள் நாட்டின் கண்கள் என்று கூறுவார்கள்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 10:02 am

மணிகண்டன் தியாகராஜன்


பெண்கள் நாட்டின் கண்கள் என்று கூறுவார்கள்.  ஒரு தேசத்தை பிற நாட்டினர் மதிப்பதற்கு அளவுகோலாக அந்த நாட்டில் பெண்களுக்கு எந்த அளவுக்கு பாதுகாப்பு  இருக்கிறது என்பதும் அடங்கியிருக்கிறது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் இன்று நேற்று தொடங்கியதில்லை. காலம்காலமாக அரங்கேறி வரும் மோசமான ஒன்றுதான் பாலியல் வன்கொடுமைகள். இன்றைய காலத்தில் தகவல்தொடர்பு சாதனங்களின் அசுர வளர்ச்சியால் நாட்டின் எந்த மூலையிலும் நடக்கும் எந்தவொரு செய்தியும் உடனடியாக கிடைக்கப் பெறுகிறது.

அந்த வகையில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் வன்கொடுமைகளுக்கு அதிக கவனத்தைப் பெறுகிறது. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க சட்டங்களை இன்னும் கடுமையாக்க வேண்டும் என்ற கருத்து ஒருபுறம் இருந்தாலும் ஆண்களும் மனதளவில் மாற வேண்டியது கட்டாயமாகும்.

Story image

இந்த அஞ்சா நெறி குறும்படம் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் எடுத்த முடிவு குறித்து பேசுகிறது. பெயர்த்திக்கு தாத்தா கதை சொல்வது போல் படம் தொடங்குகிறது. பணியை முடித்து விட்டு வீடு திரும்ப தனியாக இரவு நேரத்தில் பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் பெண், சில காமுகர்களால் பாதிக்கப்படும்போது, அவள் எடுக்கும் முடிவு குறித்து தாத்தா கதையாக சொல்கிறார். அந்தக் கதையில், பெண் மான் என்றும், ஆண்கள் நரிகள் என்றும் கதையை மாற்றி சொல்கிறார்.

படத்தின் முடிவு யாரும் எதிர்பாராத திருப்பம். இந்தக் கதையே அந்தச் சிறுமியின் தாயைப் பற்றியதுதான் என்பது தெரியவரும்போது ஆச்சிரயம் எழுகிறது.

நடிகர்கள் அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர். சுபாஷ், கமலேஷின் ஒளிப்பதிவு கதைக்கு தேவையான காட்சிகளை அளித்திருக்கிறது. பவகணேஷின் இசையும் அருமை.

படத்தின் முடிவில், "ஆணின் பலம் பெண்களை காக்க" என்ற நிலை வரும்போதுதான் பெண்களுக்கு உண்மையான சுதந்திரம் கிடைக்கும் என்ற அவசியமான வாய்ஸ் ஓவருடன் படம் முடிவடைகிறது.

ஹரி

ஹரி

மிக சிக்கலான கதையை அழகாக படம்பிடித்ததுடன் படத்தொகுப்பும் செய்த இயக்குநர் ஹரி கூறியதாவது:

'கோவையைச் சேர்ந்த நான் மெக்கானிக்கல் என்ஜீனியரிங் படித்து முடித்து தற்போது பணிபுரிந்து வருகிறேன். கிரிக்கெட்டிலும், கூடைப்பந்திலும் ஆர்வம் அதிகம். கல்லூரி காலத்தில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவது பிடிக்கும். ஒரு கட்டத்தில் சோப்பு டப்பா என்ற பெயரில் நண்பர்களுடன் சேர்ந்து யூ-டியூப் சேனல் ஒன்றை தொடங்கினோம். முதன்முதலாக பஞ்சபூதம் என்ற மியூஸிக்கல் குறும்படத்தை உருவாக்கினோம்.  இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அடுத்ததாக அஞ்சா நெறி கதையை எழுதினேன். சில குறும்பட விழாக்களில் விருதுகளை இந்தப் படம் வென்றுள்ளது. 

யூ-டியூப் சேனல் ஒன்றில் இந்த படம் ஒளிபரப்ப தேர்வானது. அதில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களைக் கடந்து நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அஞ்சா நெறியை உருவாக்க உதவியை அனைவருக்கும் நன்றி. தொடர்ந்து நல்ல கதைகளை திரைப்படங்களாக உருவாக்க வேண்டும் என்பது எனது லட்சியம்' என்று நம்பிக்கை வார்த்தைகளை உதிர்த்த ஹரிக்கு வாழ்த்துகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.