மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

மகனுக்கு ‘தல அஜித்’ எனப் பெயரிட்டு அதே பெயரில் பள்ளியில் சேர்த்த  தல ரசிகர்!

கனுக்கு தல அஜித் என்றும் மகளுக்கு அஜித்தா என்றும் பெயரிட்டதோடு, அதே பெயர்களில் பிறப்புச் சான்றிதழ்களை வாங்கி...

News image
Updated On :10 அக்டோபர் 2019, 10:32 am

அஜித் மீது தீவிரமான பிரியம் கொண்ட ரசிகர்கள் ஏராளமானோர் உண்டு. பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல், பட வெளியீட்டுக்கு முன்பு பேட்டி கொடுக்காமல் இருந்தாலும் அஜித் படங்களுக்கு ஆரம்ப நாள்களின் வசூல் அமோகமாக இருக்கும். 

இந்நிலையில் அஜித் ரசிகர்கள் ஒருவர் தன் மகனுக்கு தல அஜித் என்றும் மகளுக்கு அஜித்தா என்றும் பெயரிட்டதோடு, அதே பெயர்களில் பிறப்புச் சான்றிதழ்களை வாங்கி, பள்ளியிலும் அதே பெயர்களில் சேர்த்துள்ளார். 

மதுரை ஜீவா நகரைச் சேர்ந்த மதுரை வீரனுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உண்டு. மகனுக்கு தல அஜித் என்று பெயர் வைத்தவர், மகளுக்கு அஜித்தா என பெயர் சூட்டியுள்ளார். இதே பெயர்களில் பிறப்புச் சான்றிதழ்களை வாங்கியதோடு பள்ளிக்கும் இதே பெயர்களைப் பயன்படுத்தியுள்ளார். பிறப்புச் சான்றிதழ், ஆதார் ஆட்டை, பள்ளி அடையாள அட்டை என அனைத்திலும் தல அஜித், அஜித்தா என்றே பெயர்கள் இடம்பெற்றுள்ளன. 

இந்தச் செய்தி தற்போது வெளியாகியுள்ளதால் பலரும் தல அஜித் மாணவனின் பிறப்புச் சான்றிதழ், பள்ளி அடையாள அட்டைப் புகைப்படங்களைச் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.