தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

கடாரம் கொண்டான் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கடந்த ஆண்டு விக்ரம் நடிப்பில் வந்த சாமி 2 மற்றும் ஸ்கெட்ச் ஆகிய படங்கள் வெற்றி பெறவில்லை

News image
Updated On :30 ஜூன் 2019, 5:59 am

கடந்த ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான சாமி 2 மற்றும் ஸ்கெட்ச் ஆகிய படங்கள் எதிர்ப்பார்க்கப்பட்ட அளவு வெற்றி பெறவில்லை. இதனால் நடிகர் விக்ரமின் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அடுத்து விக்ரம் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் ஆக்‌ஷன் த்ரில்லர் படமான கடாரம் கொண்டான் படம் வெளியாக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். 

Story image

ராஜேஷ் செல்வா இயக்கும் கடாரம் கொண்டான் படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் அக்‌ஷரா ஹாசன், லீனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விக்ரம் போலிஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story image

பட அறிவிப்பினைத் தொடர்ந்து இப்படத்தைப் பற்றிய அதிக செய்திகள் வரவில்லை. இந்நிலையில் இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கமல் ஹாசனின் பிறந்தநாளன்று வெளியானது. தற்போது படப்பிடிப்பு முடிவுற்ற நிலையில் வரும் ஜூலை 19-ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஜூலை 3-ம் தேதி கடாரம் கொண்டான் படத்தின் ட்ரெய்லர் வெளியாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.