தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

வெற்றி வாகை சூடியதா சூர்யாவின் என்ஜிகே? வசூல் விபரங்கள் இதோ!

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில்  கடந்த 31-ம் தேதி வெளியான என்ஜிகே திரைப்படம் சென்னையில் இதுவரை ரூ.3.07 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது. 

News image
Updated On :3 ஜூன் 2019, 5:51 am

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில்  கடந்த 31-ம் தேதி வெளியான என்ஜிகே திரைப்படம் சென்னையில் இதுவரை ரூ.3.07 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது. 

எஸ்.ஆர். பிரபு தயாரிப்பில் சூர்யா - இயக்குநர் செல்வராகவன் கூட்டணியில் உருவாகிய படம் - என்ஜிகே. இப்படத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங், தேவராஜ், பொன்வண்ணன், தலைவாசல் விஜய், இளவரசு, குரு சோமசுந்தரம், வேல ராமமூர்த்தி, பாலாசிங் ஆகியோர் நடித்துள்ளார்கள். இசை - யுவன் சங்கர் ராஜா. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 

Story image

இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் வெளியான விமரிசனங்களை எல்லாம் மீறி, இப்படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. மேலும் வசூல் ரீதியாகவும் இந்தப் படம் சூப்பர் ஹிட். படம் வெளியான முதல் நாளில் மட்டும் ரூ.1.03 கோடி வசூல் எடுத்து புதிய சாதனை படைத்துள்ளது. இதுவரை சூர்யா நடிப்பில் வந்த எந்த படமும் முதல் நாளில் ரூ.1 கோடிக்கு அதிகமாக வசூல் குவித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரீலிஸான இரண்டாம் நாள் முடிவில் இப்படம் ரூ.1.07 கோடி வசூல் குவித்துள்ளது என்று கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.