தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

கேலி, கிண்டல்களால் நீச்சல் குளப் புகைப்படத்தை நீக்கிய செளந்தர்யா ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் மகன் வேத்-உடன் நீச்சல் குளத்தில் விளையாடிய போட்டோ

News image
Updated On :2 ஜூலை 2019, 4:14 am

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் தன் மகன் வேத்-உடன் நீச்சல் குளத்தில் விளையாடிய போது எடுக்கப்பட்ட போட்டோவை தனது டிவிட்டரில் அண்மையில் பதிவிட்டிருந்தார். அதில் அவர் 'குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே நீச்சல் கற்றுக் கொடுங்கள் ...அதன்பின் தாங்களாகவே அதில் தேர்ச்சி பெற்றுவிடுவார்கள். நீச்சல் கற்பது அத்யாவசியமான ஒரு செயல். #TeachThemYoung #KeepThemActive #WaterFun #EnsureSafetyAlways #NeverLeaveThemAlone #Motherhood #Bliss என்று சில ஹேஷ்டேக்ஸ் உருவாக்கி தனது மகிழ்ச்சியான தருணங்களை வார்த்தைகளாய் பதிவிட்டிருந்தார்.

Story image

இந்தப் புகைப்படங்களைப் பார்த்த சிலர் சென்னையே தண்ணீர் கஷ்டத்தில் மூழ்கியிருக்கும் போது மகனுடன் நீச்சல் குளத்தில் உற்சாகமாக விளையாட உங்களுக்கு எப்படி மனம் வந்தது? என்று கேள்வி எழுப்பினர். இதைத் தொடர்ந்து அப்பதிவை நீக்கிய செளந்தர்யா, ‘சென்னைவாசிகள் எதிர்கொள்ளும் தற்போதைய தண்ணீர் பிரச்னையை கருத்தில் கொண்டு எனது சொந்த பதிவுக்காக பகிரப்பட்ட படங்களை அகற்றிவிட்டேன். சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு உடல் செயல்பாடுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதே அந்தப் படங்களை பதிவிட்டேன்’ என்று தன்னிலை விளக்கத்தைப் பகிர்ந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.