பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

மாணவர் ஒற்றுமையை வலியுறுத்திய பாலிவுட் நடிகை

மாணவர் சமூகத்துடன் ஒற்றுமையை பலப்படுத்துவதில் பிரியங்கா சோப்ரா மற்ற பாலிவுட் நட்சத்திரங்களுடன் அண்மையில் இணைந்துள்ளார்.

News image

priyanka chopra

Updated On :19 டிசம்பர் 2019, 6:43 am

மாணவர் சமூகத்துடன் ஒற்றுமையை பலப்படுத்துவதில் பிரியங்கா சோப்ரா சக பாலிவுட் நட்சத்திரங்களுடன் அண்மையில் இணைந்துள்ளார்.

பிரியங்கா உலகளாவிய யுனிசெஃப் நல்லிணக்க தூதராக உள்ளார். மேலும் கல்வி குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடையே தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறார்.

அண்மையில் மாணவர் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை பற்றி ட்விட்டரில் பிரியங்கா கூறியுள்ளது, "ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்பது எங்கள் கனவு. கல்வி அவர்களை சுதந்திரமாக சிந்திக்க வைக்கும். தங்களுக்கான குரலை கொடுக்கும்விதமாகத்தான் அவர்களை நாங்கள் உருவாக்குகிறோம். வளர்ந்து வரும் ஜனநாயகத்தில், குழந்தைகளின் உரிமைக்காக குரல் கொடுப்பது அத்யாவசியமானது.  ஆனால் அமைதி வழியில் நடக்கும்போது, அவர்களுக்கு எதிராக வன்முறை செலுத்துவது தவறு. ஒவ்வொருவரின் குரலும் முக்கியம். காரணம், ஒவ்வொரு குரலும் இந்தியாவை மாற்றுவதற்காக செயல்படும்’ என்று பதிவிட்டுள்ளார். 

படங்களைப் பொருத்தவரை, பிரியங்கா சோப்ரா கடைசியாக ஷோனாலி போஸின் 'தி ஸ்கை இஸ் பிங்க்' படத்தில் ஃபர்ஹான் அக்தர், ரோஹன் சரஃப் மற்றும் ஜைரா வாசிம் ஆகியோருடன் நடித்தார். இந்தப் படம் அக்டோபர் 11 ஆம் தேதி வெளியிடப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.