எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

மோடி போன்ற மிகப்பெரிய தலைவரால் தான் இந்த துணிச்சலான முடிவை எடுக்க முடியும்: அமலா பால்

நரேந்திர மோடி போன்ற மிகப்பெரிய தலைவரால் தான் இந்த துணிச்சலான முடிவை எடுக்க முடியும் என்று ட்விட்டரில் இதுகுறித்து அமலா பால் பதிவிட்டுள்ளளார்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:44 am

Raghavendran

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு நீக்கம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிவு போன்ற அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது. 

இந்நிலையில், நடிகை அமலா பால் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு அளித்துள்ளார். ட்விட்டரில் இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது,

Story image

சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு நீக்கம் வரவேற்கத்தக்து. இதன்மூலம் ஆரோக்கியமான, நம்பிக்கையளிக்கக் கூடிய மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கை எடுப்பது சாதாரண காரியமல்ல.

Story image

நரேந்திர மோடி போன்ற மிகப்பெரிய தலைவரால் தான் இந்த துணிச்சலான முடிவை எடுக்க முடியும். வருங்காலங்களில் காஷ்மீரில் அமைதி ஏற்பட பிரார்த்திக்கிறேன், ஜெய் ஹிந்த் என்றிருந்தது.

ஆம்ஆத்மி கட்சித் தலைவரும், தில்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால் மத்திய அரசின் இம்முடிவை பாராட்டி பதிவிட்டதை அமலா பால் ரீட்வீட் செய்து தனது கருத்தை பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.