ஜெய், ரெபா மோனிகா, ரோபோ சங்கர், டேனியல், அனி போப், அமித் குமார் திவாரி, இளவரசு, போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். நிதின் சத்யா தயாரிக்கிறார். இந்தப் படத்தைப் பற்றி இயக்குநர் பிச்சுமணி கூறுகையில், 'இந்தக் கதையை கோடம்பாக்கத்தில் இருக்கிற அனைத்து தயாரிப்பாளர்களிடமும் சொல்லியிருக்கிறேன். கதை பிடித்து, இறுதி கட்டத்தை எட்டும் போது ஏதாவது பிரச்னைகள் வந்து படம் நின்று போகும். அப்படித்தான் இந்தக் கதை நடிகர் நிதின் சத்யாவிடம் சொல்லப்பட்டது. கதை பிடித்தவுடனே எந்த தயக்கமும் இன்றி படப்பிடிப்பைத் தொடங்கி விட்டார்.