தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

அருவிக்குப் பிறகு வேறு படங்களில் இன்னும் ஏன் நடிக்கவில்லை! அதிதி பாலன் விளக்கம்!

கடந்த ஆண்டு வெளிவந்த படங்களில் குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்ற திரைப்படம் அருவி.

News image
Updated On :31 மே 2018, 7:21 am

கடந்த ஆண்டு வெளிவந்த படங்களில் குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்ற திரைப்படம் அருவி. அருண் பிரபு இயக்கிய இந்தப் படத்தில் அதிதி பாலன், அஞ்சலி வரதன் போன்றோர் நடித்தார்கள். அளவான நடிப்பும், அழகான இளம் பெண்ணிலிருந்து எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட நோயாளியாக மாறி அருவி எனும் கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்தவர். முதல் படத்திலேயே இத்தகைய கனமான பாத்திரத்தை ஏற்று நடித்ததுடன் அதற்கு சரியான நியாயத்தையும் செய்தமையால் ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலகர்களின் கவனத்தை கவர்ந்துவிட்டார். அத்திரைப்படம் சர்வதேச அரங்குகளில் விருதுகளை அள்ளிக் குவித்ததன் முக்கிய காரணம் அதிதியின் பங்களிப்பு எனலாம்.

பொதுவாக முதல் பட வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் மற்றும் நடிகர் நடிகைகளுக்கு தொடர்ந்து பல புதிய வாய்ப்புக்கள் வந்து குவியும். பிரபல தயாரிப்பு நிறுவனமான 24ஏஎம் ஸ்டூடியோ தயாரிப்பில் தனது அடுத்தப் படத்தை இயக்கவுள்ளார் அருண் பிரபு. இது பற்றிய அறிவிப்பை தயாரிப்பாளர் ஆர்.டி. ராஜா அண்மையில் வெளியிட்டுள்ளார்.

Story image

போலவே அதிதி பாலனுக்கும் நிறைய வாய்ப்புக்கள் தேடி வந்தது. ஆனால் அவர் இன்னும் எந்தப் படத்தையும் தேர்ந்தெடுக்கவில்லை. காரணம் அதிதி தனது அடுத்த படமும் கதையம்சம் கொண்டதாக இருக்க வேண்டும் என்ற முடிவில் இருப்பதால் எண்ணற்ற கதைகளை கேட்டும் அவர் இன்னும் தனக்கான கதையை தேர்ந்தெடுக்கவில்லை. அருவி படத்தில் கிடைத்த நல்ல பெயரைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார் அதிதி பாலன். இப்படி தாமதித்துக் கொண்டிருந்தால் ரசிகர்கள் மறந்துவிடுவார்கள் என்று கோலிவுட் தரப்பினர் சொல்லியும், அதிதி இசையவில்லை. பொறுமையாக தனக்கேற்ற படத்தில் நடிக்கவே விருப்பம் என்று தேடி வந்த வாய்ப்புக்களை நிராகரித்துவிட்டார். நல்ல கதை கிடைக்க சில ஒன்றிரண்டு வருடங்கள் ஆனாலும் கூட காத்திருக்கப் போவதாக தீர்மானமாகச் சொல்லிவிட்டாரம் அதிதி பாலன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.