வடிவேலு தமிழ் உள்ளங்களில் நீங்காத இடம் பிடித்த நகைச்சுவை நடிகர். தமிழ் திரையுலகில் அவருடைய பங்களிப்பு அளவில்லாதது. வடிவேலுவின் நகைச்சுவை குழந்தைகளை வெகுவாக கவர்ந்துவிடும். காரணம் அவருடைய குரல் வளமும், அதில் அவர் காண்பிக்கும் மாடுலேஷன்களும், தனித்துவமான உடல் மொழியும் எனலாம். தவிர ஆஹான்...அவ்வ்வ்வ்வ், ஊஊஊஊ போன்ற சிறப்பு சத்தங்களையும் உருவாக்குபவர் என்பதாலே குழந்தைகளுக்கும் பிரியமான நடிகரானார்.
அண்மையில் வடிவேலுவின் மகளுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளனர். ஆண் மற்றும் பெண் குழந்தைகளை ஒரே பிரசவத்தில் வடிவேலுவின் மகளுக்கு பிறந்துள்ளனர். இரட்டைக் குழந்தைகளுக்குத் தாத்தாவாகி இருப்பதால் வடிவேலு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார். இந்த மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு விருந்தளித்து சிறப்பாகக் கொண்டாடினார்.
தற்போது இயக்குநர் சுராஜ் இயக்கவிருக்கும் புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் வடிவேலு. அந்தப் படத்தில் நடிகர் விமல் கதாநாயகனாக ஒப்பந்தமாகியுள்ளார். விமல் - வடிவேலு புதிய காம்போ கோடம்பாக்கத்தில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இயக்குநர் சுராஜ் அர்ஜுன் - வடிவேலு கூட்டணியில் ‘மருதமலை’ படத்தை இயக்கியவர். அந்தப் படத்தில் இடம்பெற்ற நகைச்சுவை காட்சிகள் இன்றளவும் ரசிகர்களிடையே பெறும் வரவேற்பை பெற்றுவருகிறது. சுராஜின் பெயரிடப்பட்டாத இந்தப் படத்தில் விமலுடன் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக்கவிருக்கிறார் என்றனர் படக்குழுவினர்.
அண்மைக்காலமாக திரைப்படங்களில் அதிகம் காணாமலான வடிவேலு மீம்ஸ்களிலும், நகைச்சுவை சானல்களில் தொடர்ந்து தன்னை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார். தற்போது இந்தப் படம் அவரது இரண்டாவது இன்னிங்க்ஸாக அமையும் என வடிவேலு ரசிகர்கள் விரும்புகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அவிநாசி நகருக்குள் வராத பேருந்துகள்: பொதுமக்கள் அவதி

மொடக்குறிச்சியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு: இளம் வாக்காளா்கள் வாக்களிக்க ஆா்வம்

சா்வதேச கராத்தே போட்டி: காடையூா் விவேகானந்தா அகாதெமி பள்ளி மாணவருக்கு வெள்ளிப் பதக்கம்

தேசியவாத காங்கிரஸ் தலைவா் கொலை வழக்கு: அமித் ஜோகிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


