திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை முந்திவிட்டாரா மனவாடு மகேஷ் பாபு? 

கடந்த வாரம் வெளியான ரஜினி நடித்த 'காலா' டீஸர் வெளியான நாளிலிருந்தே யுடியூபில் முதலிடத்தில் இருந்து வந்தது.

News image
Updated On :8 மார்ச் 2018, 8:52 am

கடந்த வாரம் வெளியான ரஜினி நடித்த 'காலா' டீஸர் வெளியான நாளிலிருந்தே யுடியூபில் முதலிடத்தில் இருந்து வந்தது. ரஜினி ரசிகர்கள் இந்த டீஸரைப் பற்றிய கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிர்ந்து வைரலாக்கினர்.

ஆனால், அண்மையில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு நடித்துள்ள 'பரத் அனி நேனு' படத்தின் டீசர் வெளியானது. வெளிவந்த ஒரே நாளில் 80 லட்சம் பார்வைகளைக் கடந்தும், 2 லட்சத்து 60 ஆயிரம் லைக்குகளைப் பெற்றுவிட்டது இந்த டீஸர். மேலும் இது 'காலா' முதல் நாள் டிரென்டிங்கில் இரண்டாம் இடத்திற்குத் தள்ளி முதலிடத்துக்கு வந்துவிட்டது. இது முதல் நாள் கணிப்பு தான், வரும் நாட்களில் இந்த டீஸரின் பார்வையாளர்கள் அதிகரிப்பார்களா என்று பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

ரஜினிகாந்த் பட டீஸரை பின்னுக்குத் தள்ளி மகேஷ் பாபு டீஸர் முதலிடம் பிடித்திருப்பதை டோலிவுட் திரையுலகம் மகிழ்ந்துள்ளது. ஆனால் ரஜினிகாந்தின் காலா டீஸர்,  2.0 டீஸர் லீக், அவரின் அண்மை அரசியல் பேச்சு என ட்ரெண்டிங்கில் ரஜினிகாந்த் தான் எப்போதும் முன்னணியில் இருக்கிறார். இது வரை காலா டீஸருக்கு 1 கோடியே 80 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களும், 4 லட்சத்து 63 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.