அண்மையில் கொச்சியில் நடைபெற்ற இந்தியன் சூப்பர்லீக் ஃபுட்பால் போட்டியில் (ISL) சென்னை அணியுடன் மோதிய கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை உற்சாகப்படுத்த பிரியா வாரியர் கலந்து கொண்டார். அவருடன் நடிகர் ரோஷனும் கலந்து கொண்டார். கொச்சியில் ஜவஹர்லால் ஸ்டேடியத்தில் நடந்த இந்தப் போட்டியில் கேரள அணியின் பகுதி பங்குதாரான சச்சின் டெண்டுல்கர் வந்திருந்தார். சச்சினை ஸ்டேடியத்தில் பிரியா வாரியரும் ரோஷனும் சந்தித்து அவருடன் உரையாடி, தங்களது கேரள அணியின் ஜெர்கினை அவரிடம் வழங்கி, உற்சாகமாக செல்பி மற்றும் விடியோ எடுத்துக் கொண்டனர். ட்விட்டரில் அவற்றை பகிர்ந்து சச்சினை சந்தித்த அந்த மகிழ்ச்சியான அனுபவத்தைப் பற்றி குறிப்பிட்டு அவருடன் எடுத்துக் கொண்ட வீடியோவையும் பகிர்ந்துள்ளார் பிரியா வாரியர்.