கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் என்கூட அரசியல் சார்ந்தும், அரசியலில் அவருடைய ஈடுபாடு எப்படி வந்தது என்றெல்லாம் பேசினார். சினிமாவில் நான் இவ்வளவு பெரிய இடத்தைப் பிடிப்பேன் என்பது எனக்கு தெரியாது. நிச்சயமா எனக்கு மேல இருக்கற கடவுள் காட்டிய கருணை. 96-ல் எனக்குத் தோணவில்லை. இப்ப அரசியலுக்கு வரணும், இல்ல மக்களுக்கு ஏதாவது நல்லது செய்யணும்னு தோணுது. இது வரைக்கும் என் உடனிருந்த என்னை ரொம்ப உயர்த்தின அதே கடவுள் இதுக்கும் ஒரு வழி வகுப்பார் என்ற நம்பிக்கை இருக்கு. அது ஒன்னுதான் உத்வேகப்படுத்துற ஒரே விஷயம். ரொம்ப நாளா சுயநலமா இல்லாம மக்களுக்கு ஏதாவது நல்லது செய்யணும்னு எனக்குத் தோணுது. அதைத் தவிர வேற எதுவும் எனக்குத் தெரியாது. இதுக்காக் இப்படித்தான் பேசணும் அப்படித்தான் பேசணும் என்று முடிவு பண்றதும் கிடையாது. எப்படி நான் இயல்பா இருக்கறனோ அது மக்களுக்குப் பிடிக்கும்னு நம்பறேன் என்று அவர் சொன்ன விஷயங்கள் எல்லாம் எனக்கு பிடிச்சுப் போச்சு. எல்லோருக்கும் பிடிக்கும்.