கமல் ரஜினியைத் தொடர்ந்து தளபதி எனச் செல்லமாக ரசிகர்களால் அழைக்கப்படும் விஜய் அரசியலில் ஈடுபடுவார் என்று அவரது ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு அவரது பிறந்த நாளன்று விஜய் மக்கள் இயக்கம் எனும் அமைப்பைத் தொடங்கியிருந்தார். தற்போது ஜூன் மாதம் அவரது பிறந்த நாளன்று நல்லதொரு முடிவை எடுப்பார் எனக் கூறப்படுகிறது.

ஜிஎஸ்டிக்கு எதிராக மெர்சல் படத்தில் விஜய் பேசிய வசனம் பாஜவினர் பெரும் கோபத்துக்கு ஆளாக்கியது. தனது படங்களுக்கு பிரச்னை வரும் சமயங்களில் மட்டுமே அரசை எதிர்த்து விமரிசனம் செய்தவரல்ல அவர். தன்னுடைய படங்களின் மூலமும், குடிமகன் என்ற ரீதியிலும் தனது கறாரான சாடல்களை பல முறை முன் வைத்துள்ளார். தான் பங்கேற்ற பல மேடைகளில் மக்கள் பிரச்னை குறித்து பேசியிருக்கிறார். ஒரு நடிகராக மட்டுமல்லாமல் சக மனிதருக்கு ஆதரவாக குரல் எழுப்ப அவர் தவறியதில்லை. நீட் தேர்வுப் பிரச்னையில் தற்கொலை செய்து கொண்ட அனிதாவில் தொடங்கி விவசாயிகள் பிரச்னை வரை மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேடைப் பேச்சு, பொது நலன் கொண்ட சந்திப்புக்கள் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களிலும் சுறுசுறுப்பாக்க இயங்கி வருபவர் விஜய். அவரது ரசிகர்கள் விஜய் அரசியலுக்கு வருவதன் மூலம் நல்லாட்சி ஏற்படும் என நம்பத் தொடங்கினர். இந்நிலையில் அண்மையில் மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒரு போஸ்டர் அடித்துள்ளனர். அதில், 'தன் பிறந்த தினமான ஜூன் 22 அன்று முடிவு எடுக்கிறார் ஜோசப்விஜய்! தன் நீண்டநாள் மௌனத்தை கலைக்கிறார்! என்று தலைப்பிட்டு போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

மேலும், தமிழகம் எங்கும் ரசிகர்கள் உற்சாகம், தமிழக மக்கள் மகிழ்ச்சி, அரசியல் கட்சிகள் அதிர்ச்சி, விவசாயிகள் வரவேற்பு, திரையுலகினர் வாழ்த்து போன்ற சொற்றொடர்கள் அந்தப் போஸ்டரில் இடம்பெற்றுள்ளது. விஜய் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ள நிலையில் இதுகுறித்து அவரிடமிருந்து எவ்வித அதிகாரபூர்வமான தகவலும் இன்னும் வெளிவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சா்வதேச கராத்தே போட்டி: காடையூா் விவேகானந்தா அகாதெமி பள்ளி மாணவருக்கு வெள்ளிப் பதக்கம்

தேசியவாத காங்கிரஸ் தலைவா் கொலை வழக்கு: அமித் ஜோகிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்

ஆம்பூரில் அமைதியாக முடிந்த வாக்குப் பதிவு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


