சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

படப்பிடிப்பு தளத்தில் பெரும் தீ விபத்து: உயிர் தப்பிய நடிகர்!

2.0 படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிப்பவர் பாலிவுட்டில் நடிகர் அக்‌ஷய் குமார். ஷங்கர் இயக்கிய

News image
Updated On :26 ஏப்ரல் 2018, 12:06 pm

2.0 படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிப்பவர் பாலிவுட்டில் நடிகர் அக்‌ஷய் குமார். ஷங்கர் இயக்கிய இப்படத்தின் எடிட்டிங் வேலைகள் நடந்து வருகின்றது. விரைவில் 2.0 ரிலீஸ் ஆகும். அக்‌ஷய் குமாரின் நடிப்பில் அண்மையில் வெளிவந்த பேட்மேன் ஒட்டுமொத்த திரை ரசிகர்களின் கவனத்தைக் கவர்ந்தது.

Story image


 
தற்போது 'கேசரி' என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார் அக்‌ஷய். அனுராக் சிங் இயக்கும் இப்படத்தில் அக்‌ஷய் குமாரின் ஜோடியாக பர்னீதா சோப்ரா நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மும்பைக்கு 200 கி.மீ தள்ளியுள்ள வய் (Wai) என்ற இடத்தில் நடந்து வருகிறது. 1897-ம் ஆண்டு நடந்த சரகாரி போரை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் சண்டை காட்சியொன்றின் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக படப்பிடிப்பு தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மின்னல் வேகத்தில் தீ பரவியதில் பல லட்சம் ரூபாய் செலவழித்துப் போடப்பட்டிருந்த பிரம்மாண்ட செட் தீக்கிரையானது. தகவல் அறிந்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் பல மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர் தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக படக் குழுவினர் எவ்வித காயமின்றி தப்பியுள்ளனர். அக்‌ஷய் குமார் தனது பகுதி முடிந்தபடியால் ஏற்கனவே கிளம்பிவிட்டார். இந்த தீ விபத்தால் படப்பிடிப்பு சில நாட்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் அடுத்த ஆண்டு ஹோலி தினத்தில் வெளியாகும் என்கின்றனர் படக்குழுவினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.