‘ஆம், அன்று நான் சுனிலை நோக்கி என் ஷூவை விட்டெறிந்தது உண்மை தான். அவர், என்னைப் பார்த்து ‘ஏன் இப்படி பிஹேவ் செய்கிறாய்? என்று கேட்டார். எனக்கிருந்த மன அழுத்தத்தில், என் நண்பன் தானே என்று முன்னுரிமை எடுத்துக் கொண்டு அப்படிச் செய்து விட்டேன். ஆனால் மக்கள் ஏன் அப்படி நினைக்கவில்லை என்று தான் எனக்குப் புரியவில்லை. இந்தச் சம்பவத்தை இரு நண்பர்களுக்கிடையில் நடந்ததாக நினைத்து மன்னித்து விட்டு விட அவர்கள் தயாராக இல்லை. மேலும், மேலும் அதைப் பற்றிப் பேசி, என்னை விமர்சித்து இதைப் பெரிய பகையாக மாற்றி விட்டார்கள். நான், இப்போதும் சுனிலை மிகவும் நேசிக்கிறேன். ஆனால், நாம் யாரை நம்புகிறோமோ, யாரை மிகுதியாக நேசிக்கிறோமோ அவர்களால் தான் நமக்கு பெரிய அளவில் துன்பம் வந்து சேர்கிறது.