மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

சாமி - 2 வில் ஹாரிஸுக்கு பதில் தேவி ஸ்ரீ பிரசாத்!

இயக்குனர் ஹரியின் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில்  உருவாகவுள்ள சாமி-2 படத்தில் ஹாரிஸ் ஜெயராஜுக்கு பதிலாக தேவி ஸ்ரீ பிரசாத் ...

News image
Updated On :17 மே 2017, 7:27 am

சென்னை: இயக்குனர் ஹரியின் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில்  உருவாகவுள்ள சாமி-2 படத்தில் ஹாரிஸ் ஜெயராஜுக்கு பதிலாக தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பாலசந்தரின் கவிதாலயா தயாரிப்பில், இயக்குனர் ஹரியின் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் 2003-ஆம் ஆண்டு வெளியான படம் 'சாமி'. வில்லத்தனம் கலந்த போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிகர் விக்ரம் சிறப்பாக நடித்த இந்த படமானது பெரும் வெற்றி பெற்றது.

தற்பொழுது 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தின் இரணடாம் பாகமானது தயாராகவுள்ளது. சிபு தமீன்ஸ் தயாரிப்பில் உருவாக்கவுள்ள இந்த படத்தில் த்ரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷ் என இரண்டு கதாநாயகிகள் நடிக்க உள்ளனர். முதல் பாகத்திற்கு இசையமைத்த ஹாரீஸ் ஜெயராஜே இந்த பாகத்திற்கும் இசையமைப்பார் என்று முதலில் தகவல் வெளியானது.

ஆனால் தற்பொழுது தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஹாரிஸ் ஜெயராஜுக்கு பதிலாக தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் இணையும் ஐந்தாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த மாதம் முதல் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.