நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!தியாகப் பெருஞ்சீலர்! நல்லகண்ணுவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி! நல்லகண்ணு உடல் தானம்! கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

சினிமா பிரபலத்துக்கு அனுப்பப்பட்ட மோசடி மெயில்கள்: சுசித்ரா காவல்துறையிடம் புகார்!

எனது மின்னஞ்சலையும் ஹேக் செய்து அதிலிருந்து என் கையெழுத்துடன் சினிமா பிரபலத்துக்கு மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டுள்ளன...

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:31 pm

எழில்

சில மாதங்களுக்கு முன்பு, பாடகி சுசித்ராவின் ட்விட்டர் கணக்கில் இருந்து தனுஷ் மற்றும் இதர பிரபலங்களைப் பற்றி பல்வேறு விதமான ட்வீட்கள் வெளியாகின. இதனால் ட்விட்டர் வலைத்தளத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சுசித்ராவின் ட்விட்டர் கணக்கு ஹேச் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியானது. பிரபல நடிகர், நடிகைகளின் புகைப்படங்கள், வீடியோக்கள், மின்னஞ்சல்கள் என தனிப்பட்ட தகவல்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டதால் தமிழ்த் திரையினர் மிகுந்த கவலையடைந்தனர். 

பிறகு, அத்தகைய புகைப்படங்களும் வீடியோக்களும் அவருடைய ட்விட்டர் கணக்கிலிருந்து அகற்றப்பட்டன. சுசித்ராவின் ட்விட்டர் கணக்கும் நீக்கப்பட்டது. இதனால் சுசித்ராவின் ட்விட்டர் சர்ச்சைகளுக்கு முடிவுகட்டப்பட்டது. அப்போது இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையிடம் மனு அளித்தார் சுசித்ரா.

இந்நிலையில் இன்று சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு அவர் வருகை தந்தார். அங்கு சுசித்ரா அளித்த மனுவில் கூறியதாவது:

எனது ட்விட்டர் கணக்கில் புகைப்படங்கள் வெளியானதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. என் ட்விட்டர் கணக்கை ஹேக் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். ஏப்ரல் மாதத்தில், எனது மின்னஞ்சலையும் ஹேக் செய்து அதிலிருந்து என் கையெழுத்துடன் சினிமா பிரபலத்துக்கு மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டுள்ளன. எனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர் மனு அளித்துள்ளார். இந்தப் புகார் மனு சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.