சமீபத்தில் இந்தியத் திரைப்பட உலகில் 1000 கோடி ரூபாய் வசூலித்த பாகுபலி திரைப்படம் வாயிலாக உலகம் முழுதும் பிரபலமானவர்களில் நடிகை ரம்யா கிருஷ்ணனும் ஒருவர். ரம்யா கிருஷ்ணன் பாகுபலி திரைப்படத்துக்கு முன்பே தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட உலகினருக்கு நன்கு அறிமுகமானவரே. தற்போது திரைப்படங்கள் மட்டுமன்றி தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் தனது சொந்தத் தயாரிப்பில் நெடுந்தொடர்களிலும் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழித் திரைப்படங்களிலும் நடித்து வரும் ரம்யா கிருஷ்ணன் தனது படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள வசதியாக இருக்கும் பொருட்டு சென்னையில் அவரது பெற்றோர் மற்றும் சகோதரி மற்றும் ஒரே மகனுடன் சேர்ந்து தங்கியுள்ளார்.